Wednesday, July 5, 2023

Assistive Tech: பார்வையற்றவர்களுக்கு பார்வையாகும் AI Cloud

 ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன்.  கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக எளிது ஐந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு சில வேலைகளை செய்ய முனைந்தாலே அவர்கள் படும் துன்பம் உங்களுக்குத் தெரிந்துவிடும்.  கண்பார்வையற்றவர்களுக்கு  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏதாவது செய்ய முடியுமா? 



 நிச்சயம் என்கிறது அசிஸ்டிவ் டெக்னாலஜி.  மனிதர்களுக்கு துணையாக இருக்க உதவும் தொழில்நுட்பத்தினை அசிஸ்டிவ் டெக்னாலஜி என்பார்கள்.  ஜிபிடி 4 , AI Cloud,  கூகுள் கிளாஸ் உதவியுடன் பார்வையற்றவர்களுக்கு ஒரு புது உலகத்தையே கொடுக்க முனைந்திருக்கிறார்கள்.  இந்தத் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.

கூகுள் கிளாசை ஒரு பார்வையற்றவர் அணிந்து கொள்ள வேண்டும்.  அதில் இருக்கும் காமிரா உதவியுடன் அவரின் சுற்றுப்புறத்தை படம் பிடிக்கும்.  அந்த காட்சிகள் புகைப்படங்களாக முதலில் மாற்றப்படும்.  Gpt4  உதவியுடன் புகைப்படங்களை வார்த்தைகளாக மாற்றும் தொழில்நுட்பம் உள்ளது.  எடுத்த புகைப்படங்கள் இணையத்தின் வழியாக AI Cloud   சர்வருக்கு அனுப்பப்படும்.  அந்த புகைப்படங்களை தொழில்நுட்பம் வார்த்தைகளாக மாற்றும்.  அந்த வார்த்தைகள் சரிபார்க்கப்பட்டு மீண்டும் கூகுள் கிளாஸ் இருக்கு அனுப்பப்படும்.  கூகுள் கிளாஸ் இப்போது அந்த வார்த்தைகளை பேச்சாக  மாற்றி பார்வையற்றவருக்கு தகவலை தெரிவிக்கும்.  கூகுள் கிளாஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் செவி வழி கருவியில் அந்த பேச்சுக்கள் கேட்கும். 

மேலும்  ஒரு மனிதரை அடையாளம் காணவும்,  தன் சுற்றுப்புறத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் முடியும்.  உங்கள் நண்பர் வரும் பட்சத்தில் அவர் படத்தின் உதவியுடன் கூகுள் கிளாஸ் இன்னார் என்பதை தெரிவிக்கும்.  உங்கள் சுற்றுப்புறத்தை விளக்கக் கூறினால் எதிரில்  இருப்பவற்றை படங்களாக பிடித்து அதைப் பற்றி விளக்கும். 

 நீங்கள் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால்   வானிலை,  நடைபாதையில் உள்ள தகவல்கள்,  கடைகள்,  வண்டிகள்  என நீங்கள் நடந்து செல்லும் போது உங்களுடன் ஒருவர் விளக்கமாக அதைப் பற்றி எல்லாம் விவரனையுடன் பேசிக் கொண்டிருப்பார். 

 உண்மையாகவே பார்வையற்றவர்களின் வாழ்க்கை மிக மிக எளிதாகும்.  பார்வையற்றவர்கள் யாருடைய உதவியும் இன்றி இனி புத்தகங்களை படிக்கலாம்,  எழுதலாம்,  சமைக்கலாம்,  தங்கள் வாழ்க்கையை சக மனிதரைப் போன்று வாழலாம். 


 அமிலியா என்கிற பிரெஞ்சு படத்தில் ஒரு காட்சி வரும் கண்பார்வை அற்றவர் ஒருவரை அமிழி கைப்பற்றிக் கொண்டு அவரை நடத்திக் கூட்டிச் செல்லும்போது அவரை சுற்றி நடக்கும் முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொண்டே வருவார்.  அந்த காட்சியின் முடிவில் அந்தப் பார்வையற்றவர் மிகுந்த பரவச மனநிலையின் சொர்க்கத்தை அடைந்ததைப் போல காட்டி இருப்பார்கள்.  நிச்சயம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அத்தகைய செயலை செய்து காட்டியுள்ளது.


இனி வரும் காலத்தில் Virtual reality headset உதவியுடன் பார்வையற்றவர்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று கற்பனை செய்யும் போது மகிழ்ச்சி பொங்குகிறது நிச்சயம் அவர்களின் எதிர்காலம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் சிறப்பாக இருக்கும்.




Gene origami என்றால் என்ன?

 மரபணு ஒரிகமி என்று ஒரு தொழில்நுட்பம் உள்ளது.  அதேதான் ஒரிகமி என்றால்  நீங்கள் காகிதத்தை வைத்து பல உருவங்கள் செய்கிறீர்களே  அதேதான் ஆனால் இங்கு நாம் மரபணுவை வைத்து  பல வடிவங்களை செய்யப் போகிறோம்.  ஏன் செய்ய வேண்டும்?

Targeted Drug delivery என்று மருத்துவத்தில் ஒரு தேவை உள்ளது.  நீங்கள் மருந்துகளை உட்கொள்ளும் போது அதன் பக்க விளைவுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஒரு குறிப்பிட்ட உடல் உறுப்பில் சிக்கல் என்றால் அந்த உடல் உறுப்பிற்கு தேவையான மருந்தை தான் கொடுப்பார்கள்.  அந்த மருந்து சிக்கலுக்குள்ளான உடல் உறுப்பை சரி செய்யும்.  ஆனால் அதே மருந்து ரத்தத்தில் கலந்து வேறு ஒரு உடல் உறுப்புகுள் சென்றால் அங்கே புது சிக்கல்களை உருவாக்கும்.  மருத்துவத்தில் இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை இதை தீர்க்கத்தன் டார்கெட்டட் டிரக் டெலிவரி என்ற ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் கொடுக்கும் மருந்து எந்த உடல் உறுப்பு தேவையோ அங்கு சரியாக மருந்தை செலுத்துவது.

 நம்மிடம் மருந்து உள்ளது ஆனால் அதை குறிப்பிட்ட உடல் உறுப்பு எப்படி செலுத்துவது என்பதுதான் இந்த ஆய்வுகள்.  அதில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தீர்வு இந்த  மரபணு ஒரிகமி. #NanoBilogy எனும் தொழில்நுட்பத்தின்  உதவியுடன் மரபணு Scaffolds  கொண்டு ஒரு மருந்தை குறிப்பிட்ட உடல் உறுப்பிற்கு செலுத்துவதற்கு தேவையான ஒரு வடிவத்தை உருவாக்குவார்கள்.  நம் புரிதலுக்காக சொல்கிறேன் ஒரு பெட்டி போன்றோ அல்லது ஒரு பந்து போன்றோ மரபணு ஸ்கேப் போல்டுகளைக் கொண்டு ஒரு வடிவத்தை உருவாக்கி அதில் குறிப்பிட்ட மருந்தை செலுத்தும் போது எந்த உடல் உறுப்பிற்கு தேவையோ அங்கு செல்லும். 


 நான் இதை எளிதாக விளக்கி விட்டேன் ஆனால் இது மிகவும் சிக்கலான ஒரு தொழில்நுட்பம்.  ஒவ்வொரு உடலுறுப்பிற்கும் தேவையான வடிவத்தை கண்டுபிடிப்பதும் அந்த வடிவத்தை பின்னுவதும் மிகவும் சிக்கலானது.  அண்மைய காலம் சில நம்பிக்கையான முடிவுகளை இந்த ஆய்வுகள் கொடுத்துள்ளது வரும் காலத்தில் இது மிகப்பெரிய துறையாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Tuesday, May 16, 2023

பொன்னியின் செல்வனில் ஏன் யாரும் கறுப்பாக இல்லை : Jessica Heidt பற்றி

 பொன்னியின் செல்வனில் ஏன் யாரும் கறுப்பாக இல்லை : Jessica Heidt பற்றி .



 பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் காட்டப்படும் அனைத்து தமிழ் நில கதாபாத்திரங்களும் சிவப்பாகவே காட்டப்படுகிறது.  ஆனால் இந்த கட்டுரை பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றியது அல்ல உங்களுக்கு ஜெசிக்கா ஹைடிட் என்பவரை அறிமுகப்படுத்த.


 பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்கும் போது அது நடந்த காலகட்டத்தில் தமிழர்களின் நிறம் என்பது கருப்பாகவும் மாநிறம் ஆகும் இருந்ததாகவே பல குறிப்புகள் கூறுகின்றன.  சும்மா இருநூறு ஆண்டுகளில் கூட  தமிழகத்தின் பயணம் செய்த  பலரின் குறிப்புகளிலும் தமிழக மக்களின் கருமை நிறத்தைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.  அறிவியல் படியும் தமிழ் நிலம் சார்ந்த இடத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் கருப்பு நிறத்தோல் அவர்களின் வாழ்வியலை எளிமையாக உதவி இருக்கும்.


 இன்றைய காலகட்டத்தில் பல கலப்புகள் மற்றும் அதில வீண அறிவியல் தோல் மேலாண்மை காரணமாக நிறங்களில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதை நாம் அறிகிறோம்.


 ஆனால் பொன்னியின் செல்வன் நடப்பதாக கூறும் காலகட்டத்தில் வாழ்ந்த கதாபாத்திரங்களை காட்டும் போது ஏன் இவர்கள் கருமை நிறத்தை தவிர்த்தார்கள் என்பது புரிந்து கொள்ள முடியவில்லை.  பொதுவாக தமிழ் சினிமாவில் வெண்மையான நடிகையை கூட்டி வந்து கருப்பு மை தடவையாவது கருமையாகவே காட்டுவார்கள்.


 பொன்னியின் செல்வன் படம் வந்து ஓய்ந்து விட்டதாலும், அந்தப் படத்தைப் பற்றி நிறைய பேர் பேசி விட்டதாலும் நாமும் அதன் பின்னால் செல்ல வேண்டாம். அதற்கு அவர்கள் பல காரணங்களை கூறக்கூடும். ஆனால் நான் இங்கு பேச வருவது தமிழ் சினிமாவில் கலாச்சார ரீதியாக உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை பற்றி.

 

கருமை நிறம் என்றால் அழகில்லை சிவப்பு நிறம் தான் அழகும் மேன்மையும் என்பது ஆரியர்களாலும் பின்னால் வெள்ளைக்காரர்களாலும் கலாச்சார ரீதியாக நம் மீது திணிக்கப்பட்ட ஒரு தவறான கருத்து.  கருமை என்றால் அடிமை என்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  ஆனால் சினிமாக்களிலும் விளம்பரங்களிலும் கருமை நிறத்தை மிகத் தாழ்வானதாக காட்டி அவர்கள் வியாபாரம் செய்வதோடு ஒரு கலாச்சார யுத்தத்தை நம் மீது திணிக்கிறார்கள்.  கருமை நிறம் என்பது தாழ்வு மனப்பான்மைக்கான நிறம் என நமக்கு தாழ்வு மனப்பான்மையின் ஏற்படுத்துகிறார்கள்.  இத்தகைய ஒரு மோசமான ஆதிக்க வர்க்க கருத்தை சினிமாக்களிலும் விளம்பரங்களிலும் ஊடகங்களின் வாயிலாகவும் நம் மீது மிக எளிதாக திணித்து விடுகிறார்கள்.  அந்த கருத்தின் நீச்சு தான் பொன்னியின் செல்வனின் வரும் கதாபாத்திரங்களின் நிறம்.

 நிற்க.


 ஒரு இயக்குனருக்கு சுதந்திரம் உள்ளது அதே நேரம் ஒரு இயக்குனர் என்பவர் இந்த சமூகத்தில் இருந்து வருபவர்.  சினிமா என்பதும் வியாபாரம் தொடர்பானது பெரும்பான்மை மக்களை ஈர்த்தால் தான் அவர்களால் லாபம் பார்க்க முடியும்.  இந்த இரண்டு கருத்தும் இணையும் புள்ளியில் பெரும்பான்மை மக்களின் மனதில் இருக்கும் ஒரு விஷயம் இயக்குனரையும் தாக்கி அந்த இயக்குனர் தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய ஆதிக்கவருக்கு கருத்துக்களை தன் சினிமாவில் அனுமதிக்க செய்து விடுவார். 


 இந்த கட்டுரை சினிமாவையும் இயக்குனர்களையும் இழிவுபடுத்த அல்ல மாறாக இதை எப்படி எதிர்கொண்டு வெளிவரலாம் என்பதை பற்றி தான்.


 இதற்கு தான் பிக்சார் நிறுவனத்தில் திரைக்கதை மேற்பார்வையாளராக இருக்கும் ஜெசிக்கா ஹைடேட் (Jessica Heidt) ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளார்.


 பிக்சர்(PIXAR) நிறுவனம் என்பது அனிமேஷன் தொடர்பான திரைப்படங்களை உருவாக்கி பல பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டிய நிறுவனம்.  பிக்சாரின் அனிமேஷன் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.  அந்தப் பிக்சர் நிறுவனத்தின் கதை மற்றும் திரைக்கதை பிரிவில் பணிபுரிபவர் தான் ஜெசிக்கா ஹைடேட்.  இவர் ஒரு திரைக்கதை எழுத்தாளர். 


 பல்வேறு பிக்ஸார் நிறுவனத்தின் திரைக்கதைகளை அலசி ஆராய்ந்த போது ஜெசிக்கா ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார்,  பிக்சார் நிறுவன திரைகதைகளில் ஆண் கதாபாத்திரங்களுக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கும் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. இது ஒரு வகையான பாலின சமத்துவத்தை தடுப்பதாக உள்ளது.  ஒவ்வொரு படத்திலும் அதிகமான ஆண் கதாபாத்திரங்களும் மிகக் குறைவான பெண் கதாபாத்திரங்களும் இருப்பதை அவர் கவனித்தார்.  நிச்சயம் இதை சரி செய்ய வேண்டும் என அவரின் பயணத்தை தொடங்கினார்.

 அவர் எதிர்கொண்ட முதல் சிக்கல்  படைப்பு சுதந்திரம்.  ஒரு திரை கதையை உருவாக்குபவருக்கு நிச்சயம் கருத்து சுதந்திரமும் படைப்புச் சுதந்திரமும் தேவை.  என்பதால் சரியாக எத்தனை கதாபாத்திரங்கள் என்பதை அவரால் எண்ணிக்கையுடன் உருவாக்க முடியாது என்று கூறினார்கள்.

 ஆனால் ஜெசிக்கா எடிட் முன்வைத்த வாதம் ஒரு திரைக்கதையாளர் மையக்கருவை எடுத்துக்கொண்டு அதற்கான கதாபாத்திரங்களையும் சூழலையும் உருவாக்குகிறார் அதாவது திட்டமிட்டு இன்ஜினியரிங் செய்கிறார்.  அப்படி இருக்க பயிற்சிகளின் மூலம் தாராளமாக இந்த பாலின சமத்துவ திரைக்கதைகளை படைப்பு சுதந்திரத்துடன் உருவாக்க முடியும் என்பதை உறுதியாக வாதிட்டார்.  பிக்சார் நிறுவனத்தில் வேலை செய்த பல திரைக்கதையாளர்கள் ஜெசிக்காவை புரிந்து கொண்டார்கள்.


 அடுத்ததாக ஜெசிக்கா ஒரு மென்பொருளை உருவாக்கினார்.  செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு திரை கதையை உள்ளீடாக கொடுத்தால்,  அதில் உள்ள பாலின சமத்துவத்தை கதாபாத்திரங்களின் எண்ணிக்கை வசனம் போன்றவற்றிலிருந்து சுட்டிக்காட்டும்.  அந்த ஆய்வு அறிக்கையை திரைக்கதையாளருக்கு ஜெசிக்கா அனுப்புவார்.  அதன் அடிப்படையில் திரைக்கதையையும் வசனங்களையும் மேம்படுத்துவார்கள்.

 அடுத்ததாக ஜெசிக்கா ஹைடிட் கண்டுபிடித்தது பிக்சார் நிறுவனத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் கதாநாயகர் உட்பட அனைவருமே வெள்ளை இனத்தவர் ஆக காட்டப்பட்டு இருந்தது.  இதை சுட்டிக்காட்டிய பின் கருப்பின மக்களை கதாநாயகனாகக் கொண்ட திரைப்படங்களும் பின்னால் திரைக்கதையில் கருப்பின மக்கள் சுட்டிக்காட்டும் கதாபாத்திரங்களும் புதிதாக சேர்க்கப்பட்டன.

சோல் என்ற படம், பிக்ஸர் நிறுவனத்தில் முதல் கறுப்பின ஹீரோவை கொண்ட படம்.

 பிக்ஸார் நிறுவனத்தில் தொடங்கிய இந்த சிறு திரைக்கதைப்பு புரட்சி இன்று உலகம் முழுவதும் பலராலும் ஏற்கப்பட்டு வருகிறது.  திரைக்கதை உருவாக்கத்தில் ஈடுபடும் அனைவருக்கும் தங்களுக்கே தெரியாமல் தங்கள் நினைவில் ஆதிக்க கருத்துக்களும் சமத்துவ பேதங்களும் உள்ளேன் நுழைந்திருக்கும்.  திரைக்கதை மற்றும் வசனத்தில் இது வெளிப்படும்.  அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஆனால் ஜெசிக்கா எடிட் போன்ற சமூக நீதி பற்றிய புரிதல் கொண்டவர்கள் திரைக்கதை மேற்பார்வையாளராக அமர்த்தி அந்த திரை கதைகளை அலசி ஆராய்ந்து அதை சமத்துவ பேதமற்ற திரைக்கதையாக உருவாக்க வேண்டியது தான் நம் கடமை.  இதை தேவையில்லாமல் படைப்பு சுதந்திரத்திற்குள் ஒளிந்து கொண்டு கடமையை மறுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 


குழப்பம் விளைவிக்கும் ‘கூகுள் டாக்டர்’

 என் நண்பர் ஒருவருக்கு வயிற்று வலி. மூன்று நாளுக்கு மேல் வலி தொடர்ந்தது. ஆனாலும் அவர் மருத்துவரிடம் போகவில்லை. அலுவலகத்தில் இருக்கும்போதே இணையத்தில் வயிற்று வலி பற்றிய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படித் தேடிய ஒரு தளத்தில், வயிற்றுவலி தொடர்பான மேலும் சில அறிகுறிகளைப் பட்டியல் இட்டிருந் தார்கள். நண்பருக்கு அனைத்தும் இருப்பதுபோல் ஒரு பிரமை சூழ்ந்தது. இறுதியில் அவருடைய வயிற்றில் கேன்சர் இருப்பதாக, அவரே உறுதி செய்துகொண்டு நேராகப் புற்றுநோய் நிபுணரிடம் சென்றுவிட்டார்.

பல பரிசோதனைகள், பல மருத்துவர் களைக் கண்ட பின் அவருக்கு இருந்தது வாயுத் தொல்லை என்றும், அத்துடன் லேசாக வயிற்றுப் புண்ணும் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய மருந்துகளைச் சாப்பிட்ட சில வாரங்களில் அவருக்குச் சரியாகிவிட்டது. ஆனால், அவருடைய அதீதப் பயத்தைப் போக்கத்தான் இப்பொழுது மனநல மருத்துவரிடம் போய்க்கொண்டிருக்கிறார். இந்த அவலம் தேவையா?



மாறாத வதந்திகள்

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்று உலகையே சிறு கிராமமாக்கி விட்டது. சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட் போன், வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் வருகையால், விரல் நுனியில் தகவல்கள் குவிந்துவிடுகின்றன. விஞ்ஞானத்தின் வளர்ச்சி நன்மைகளைக் கொண்டுவந்தாலும், அதை முறைகேடாகப் பயன்படுத்த நினைப்பவர்களால் சமூகத்தில் பல குழப்பங்களும் உருவாகின்றன. அதில் முக்கியமான ஒன்று மருத்துவர்களைச் சமீப காலமாகப் பாடாய்ப்படுத்தும் தவறான மருத்துவத் தகவல்கள், வதந்திகள்.
நம்பிக்கை சார்ந்த மருத்துவக் குறிப்புகள், வதந்திகள், மூடநம்பிக்கை கள் போன்றவை எல்லாம் திடீரெனப் பிறந்தவை அல்ல. காலம் காலமாக இருப்பவைதான். ஆனால் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் முன்னைவிட அவை அதிவேகமாகப் பரவி விடுகின்றன. புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருவதால் பலர் அதை நம்பவும் செய்கிறார்கள் என்பதுதான் இதில் அவலம். “வாட்ஸ்அப்பில் வந்தால் சரியாகத்தான் இருக்கும்” எனப் பலரும் தீவிரமாக நம்புகிறார்கள். அத்துடன் இணையத்தில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு மருத்துவர்களிடம் சந்தேகத்துக்கு மேல் சந்தேகங்களைக் கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள்.

அரைகுறை அறிவு
என்னுடைய நண்பர் ஒருவர் தன் மகனின் வலிப்பு பிரச்சினைக்காக மனநல மருத்துவர் ஒருவரிடம் சென்றிருந்தார். மருத்துவர் பரிசோதித்துவிட்டுச் சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். அதற்கு முன்பே என் நண்பர் தன் ஸ்மார்ட்ஃபோனில், இணையம் வழியாகச் சில தகவல்களைப் படித்துவிட்டு, “டாக்டர் இந்த மருந்தை உட்கொண்டால், லிவர் கெட்டுபோய்டுமாமே? சாப்பிடலாமா?” என்று கேட்டிருக்கிறார்.

கோபமடைந்த மருத்துவர் “மருந்தைச் சாப்பிடவில்லை என்றால், மூளை கெட்டுப்போய்டும் பரவாயில்லையா?” என்று பதிலுக்குக் கேட்டாராம்.
மருத்துவர்களிடம் சந்தேகம் கேட்கக் கூடாது என்பதல்ல. ஒவ்வொரு நோயாளிக்கும் தனக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை பற்றித் தெரிந்துகொள்ள முழு உரிமை இருக்கிறது. அரைகுறை அறிவுடன் மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு எழுப்பப்படும் சந்தேகங்கள்தான் இங்கே பிரச்சினை.

என்ன செய்வது?
முதலில் டிஜிட்டல் வழியாகப் பார்க்கும் மருத்துவத் தகவல்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை அப்படியே நம்ப வேண்டாம். அந்தத் தகவல்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களால், மருத்துவ இணையதளங்களிலோ அல்லது அரசிடமிருந்தோ வந்திருக்கின்றனவா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது நம்மிடம் நல்ல உறவைப் பேணும் மருத்துவரிடம் அது பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மாறாக, நச்சரிப்பது நல்ல விளைவைத் தராது.

அடுத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் அல்லது வலைத்தளத்தில் ஒரு தகவல் கூறப்பட்டிருந்தாலும் அது பொதுவான தகவலாக இருக்கலாம். எல்லோருக்கும் அதே அறிகுறிகள், அதே பக்கவிளைவுகள் ஏற்பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.
இணையதளங்களில் ஒரு நோய் குறித்து அனைத்து விதமான சாத்தியங்களிலும் பட்டியலிட்டிருப்பார்கள். இப்படிப்பட்ட இணையதளங்களின் நோக்கம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளச் செய்வது மட்டும்தான். சுய மருத்துவம் பார்த்துக்கொள்வதற்கு அல்ல. இணையத்தைப் பார்த்து நோயைச் சுயநிர்ணயம் செய்துகொள்வதும், அதற்கு நாமே மருத்துவம் பார்த்துக்கொள்வதும் பேராபத்தை விளைவிக்கக்கூடும். முறையான சிகிச்சைக்கான காலதாமதமும், தவறான சுயசிகிச்சையும் மீள வழியில்லாத நிலைக்கு நம் உடலைக் கொண்டுபோகும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.

இணையப் போலி மருத்துவர்கள்
மற்றொரு முக்கியப் பிரச்சினை வாட்ஸ்அப்பிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பரவும் தகவல்கள் அனைத்தும் அப்படியே உண்மை என்று நம்புவதுதான்.

மாற்று மருந்துகள், பாரம்பரிய மருந்துகள், எய்ட்ஸுக்கு மருந்து, புற்றுநோய்க்கு மருந்து என்று போலி மருத்துவர்களும், அவர்களுடைய மருத்துவக் குறிப்புகளும் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. அவை வாட்ஸ்அப்பிலும் வலம் வருகின்றன. புற்றுநோய்க்கு அகத்தியர் கூறிய சித்த மருத்துவக் குறிப்பு என்றொரு தகவல் வாட்ஸ்அப்பில் வருவதாகவும், பல புற்றுநோயாளிகள் அதை நம்பி மருத்துவம் பார்த்துக்கொள்ள மறுப்பதாகவும் எனக்குத் தெரிந்த சித்த மருத்துவர் ஒரு முறை வருத்தப்பட்டார். ‘மாற்று மருத்துவர்கள்’ என்ற பெயரில் சில போலிகள் முன்பு பிட் நோட்டீஸ் வழியாகவே கணிசமாகப் பரவினார்கள். வாட்ஸ்அப் அவர்களுடைய வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க வைத்துவிட்டது.
மருத்துவத் தெளிவு

அதேநேரம், இணையத்தில் கூறப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் குறிப்புகள்கூடப் பொதுவானவைதான். அதைப் படித்து அஞ்சத் தேவையில்லை. அது பெரும்பாலும் மருத்துவர்களுக்கான குறிப்புகள்தான். சில மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது ஒவ்வாமை பற்றிய தகவல்களும் இணையத்தில் இருக்கும்.
பொதுவாக ஒருவருடைய ஒவ்வாமைகளை உறுதி செய்த பின்னரே மருத்துவர்கள் மருந்தைப் பரிந்துரைப் பார்கள். நாமும் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். மருந்தை உட்கொண்ட பின் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்தால், மருத்துவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

தேவை உடனடி மருந்து
ஒரு விஷயம் மக்களின் பெரும்பான்மை பயன் பாட்டுக்கு வந்துவிட்டாலே அதைப் பற்றிய ஒரு கொள்கை, சட்டம், வழிகாட்டிகளை அரசு உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்பொழுது டிஜிட்டல் மருத்துவ வதந்திகள் பரவலுக்கு எதிராக அரசுடன் இணைந்து மருத்துவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தளங்கள், உதவிகள் மூலம் தவறான தகவல்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ மாணவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் உதவியுடன் இதை மேற்கொள்ளலாம். போலியான மருத்துவத் தகவல்கள், மருத்துவ வதந்திகள் ஏற்படுத்தும் மன உளைச்சலும், பயமும், தகவல் தொழில் நுட்பம் கொண்டு வந்திருக்கும் புது வகை நோய்க் கிருமி. அதைத் தகவல் தொழில்நுட்பத்தை வைத்தே எதிர்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம்.

- வினோத் ஆறுமுகம்

நன்றி  Tamil The Hindu

Monday, May 15, 2023

எச்சரிக்கை! Telegramல் இலவசமாக படம் பார்ப்பவரா?


Telegram இல் உங்களுக்கு ஏன் ஒருவர் இலவசமாக படங்களை கொடுக்க வேண்டும்?  ஒரு படத்திற்கு டிக்கெட் செலவு ஆகக்கூடாது,  ஒரு ஓடிடிக்கு  சப்ஸ்கிரைப் பணம் கொடுக்க வேண்டாம் என்று நீங்களே பணத்தை மிச்சம் பிடிக்க telegramல் படத்தை டவுன்லோடு செய்கிறீர்கள்.  உங்களுக்கு பணம் மீது எவ்வளவு அக்கறை இருக்கும்போது உங்களுக்கு இலவசமாக கொடுப்பவர் மட்டும் சமூக சேவையா செய்வார்?

 டெலிகிராமில் படங்களை தரவிறக்கம் செய்வதிலும் பலவிதமான பாட்களை  அதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளது அதைப்பற்றி நாம் தெரிந்து கொண்டு எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

 telegram என்பது இன்று பலராலும் பயன்படுத்தப்படும் சேட் ஆப்.  உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.  தகவல் பரிமாற்றத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் மிக முக்கியமான செயல் இது என பலர் நினைக்கிறார்கள்.  ஆனால் டெலிகிராமில் எதிர்பாராத விதமாக ஒரு முழு திரைப்படத்தையும் பகிரும் அளவு  வசதிகள் உள்ளது.  இதனால் விரைவிலேயே டெலெக்ராம் செயலி என்பது இலவசமாக புதிய படங்களை தரவிறக்க பயன்படுத்தப்பட்டது.

 தமிழ் ராக்கர்ஸ் அடுத்தபடியாக இன்று டெலிகிராமில் உலகம் முழுவதும் உள்ள படங்கள் மற்றும் ஓடிடி களில் வெளிவரும்  வெப் சீரியஸ்கள் பகிரப்பட்டும் தரவிறக்கப்பட்டும் வருகிறது இதற்காக யாரும் பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.

 ஆனால் இதற்கு ஒரு மறுபக்கம் உள்ளது.

 இந்த இலவச படங்களின் மூலம் சைபர் கிரிமினல்கள் ஏற்கனவே உங்கள் ஃபோன்களிலும் லேப்டாப் களிலும் நுழைந்து விட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?


 சைபர் கிரிமினல்களை பொருத்தவரை அவர்களுக்கு ஒரு போன் உள்ளும் லேப்டாப் உள்ளும் நுழைவது மிகவும் கடினமான ஒரு செயல் அப்படி அவர்கள் நுழைந்து விட்டால் உடனடியாகவோ அல்லது பல நாட்கள் உங்கள் பூனை வேவு பார்ப்பதின் பல லாபங்கள் உண்டு.

  1.  நேரடியாக உங்கள் பணத்தை திருடுவது.

  2.  உங்களைப் பற்றிய தகவல்களைத் திருடி அதை டார்க் நெட்டில் விற்பதின் மூலம் பணம் பார்ப்பது.

  3.  உங்களை மெல்ல வேவு பார்ப்பது.

  4.  உங்களை ஏமாற்றி தவறான விஷயங்களில் முதலீடு செய்ய வைப்பது.

  5.  ரான்சம்வேர் எனும் முறையில்  உங்கள் போனை முடக்கி  பணயமாக பணம் கேட்பது.

 மேலே நாம் பார்த்த சைபர் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் மால் பெயர்களை உங்கள் போனில் செலுத்த வேண்டும்.  மால் வேர்களை லிங்க் மூலம் அனுப்பி நீங்கள் கிளிக் செய்தால் தான் அந்த மால்வர் உங்கள் போன் அல்லது லேப்டாப்பில் நுழையும்.  அவ்வளவு எளிதாக நீங்கள் கிளிக் செய்து விட மாட்டீர்கள்.  ஒருவரை அந்த கிளிக் செய்ய வைக்க சைபர் கிரிமினல்கள் பல உளவியல் வழிமுறைகளை பின்பற்றுவார்கள்.


 ஆனால் இந்த இலவச திரைப்படங்கள் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. 

இதை நீங்கள் புரிந்து கொள்ள சைபர் கிரைமில் இரண்டு விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,

  1.  Malware Bundling

  2. Malvertising

Malware Bundling: இந்த முறையில் மால்வேர்களை  உண்மையான அப்ளிகேஷன் ஓடும் அல்லது திரைப்படம் பாடல்களோடும் இணைத்து சேர்த்து விடுவார்கள்.  இதனால் நீங்கள் குறிப்பிட்ட பாடலையும் படத்தையும் தரவிருக்கும் போது அதனுடனே மாபெரும் உங்கள் லேப்டாப் அல்லது ஃபோனில் டவுன்லோட் ஆகிவிடும். 

 ஒரு மால்வேர் என்பது  தீங்கான  செயலி.  அது உள்ளே வந்து விட்டால் போதும் உங்கள் ஒப்புதலுக்காக காத்திருக்காது நேரடியாக போய் உங்கள் போனை அடிமட்டம் வரை ஹேக் செய்து விடும்.


Malvertising: Telegramல் படம் டவுன்லோட் செய்த அனைவருமே இந்த  Malvertisingஐ  பார்த்திருப்பீர்கள்.  தீங்கான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட அட்வர்டைஸ்மென்ட் பக்கம் தான் Malvertising page. Malvertising  என்றால் malicious advertising என பொருள்.
நீங்கள் படத்தை டவுன்லோட் செய்யும் பக்கத்தில் “DOWNLOAD”  என்ற வார்த்தை அல்லது பட்டன்கள் பல இருக்கும் அதில் தெரியாமல் நீங்கள் ஒரு டவுன்லோட் பட்டனை அழுத்தி விட்டால் உங்களுக்கே தெரியாமல் தீங்கான செயலி உங்கள் போனுக்குள் நுழைந்து விடும்.  நிற்க இப்போதெல்லாம் இந்த பக்கத்தை நீங்கள் திறந்தாலே அந்த நொடியில் தீங்கான செயலிகள் உங்கள் போனுக்குள் நுழைந்து உங்கள் போனை ஹேக் செய்து இருக்கும்.

 இதைப்பற்றி நான் விளக்கும் போது பலரும் என் போனில் என்ன இருக்கிறது?  என்னிடம் பணமே இல்லை.  அவர்கள் ஹேக் செய்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகட்டும் என்று அலட்சியமாக கூறுவார்கள்.  உங்கள் போனில் உங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது மிகக் குறிப்பாக உங்களைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் இருக்கிறது இந்த தகவல்களை வைத்து உங்களை மிக எளிதாக குறி வைக்க முடியும்.  அனைத்துமே ஒரு நொடியில் பணம் திருடுவதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.  அப்படியல்ல ஹாக்கர்கள் வேவு பார்த்து உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி டார்க் நெட்டில் விற்கலாம். 

 இல்லை என்றாலும் உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி உங்களுக்கே தெரியாமல் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் போன் நம்பர்களையும் திருடி அவர்களுக்கு உங்களை உங்களிடம் இருந்து தவறான செய்திகளை அனுப்பி அவர்கள் போன்களையும் மிக எளிதாக ஹேக் செய்து விட முடியும்.  யோசித்துப் பாருங்கள் உங்கள் குடும்பத்தினரும் இதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.  ஒரு வேலை உங்கள் போனில் குடும்பத்தில் இருப்பவர்களின் பெண்களின் புகைப்படங்களோ குழந்தைகளின் புகைப்படங்கள் இருக்கிறது என்றால் அது டார்க் நெட்டில் மிகப்பெரிய விற்பனைக்கான பொருள்.  உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டின் பெண்கள்  குழந்தைகளை ஆபத்தில் சிக்க வைத்து விட்டீர்கள்.


 அடுத்ததாக இலவச திரைப்படங்கள் தரவிறக்கம் செய்வதற்காக நீங்கள் பல்வேறு டெலிகிராம் குழுக்களில் சேர வேண்டி இருக்கும்.  அப்படி  சேர்ந்த குழுக்களைப் பற்றி நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம் ஆனால் கொஞ்சம் கவனித்து பாருங்கள் அவை மெல்ல மெல்ல  போலியான டிரேடிங் குழுக்களாக மாறி இருக்கும். 

 இலவசமாக படங்களை தரவிறக்கம் செய்யும் பெண்களை குறி வைத்து இந்த டிரேடிங் குழுக்கள் இயங்குகின்றன.  ஒரு பக்கம் அந்தப் பெண்களின் அந்தரங்க தகவல்கள் புகைப்படங்கள் சைபர் கிரிமினல்களுக்கு ஒரு வியாபாரம் என்றால்.  மறுபக்கம் அப்பாவியான பெண்களும்,  அல்லல்படும்  ஊழியர்களும் இவர்களின் குறி.

 இலவச திரைப்படங்கள் என்று டிரேடிங் குழுக்களாக மாற்றப்பட்ட பல்வேறு குழுக்கள் ஆசை காட்டி கொஞ்சம் முதலீடு போட்டால்  நிறைய பணம் சம்பாதிக்கலாம்; பங்கு சந்தை முதலீடு ஆலோசனைகள் கொடுக்கிறோம்;  கிரிப்டோ கரன்சி முதலிட ஆலோசனைகளை கொடுக்கிறோம் என்று ஆசை வலை விரிப்பார்கள் அதில் சிக்கி பல லட்சங்களில் பணத்தை இழந்தவர்கள் அதிகம்.  ஒரு முறை நீங்கள் இவர்களிடம் சிக்கிவிட்டால் உங்கள் பணம் கிடைப்பது மிகவும் கடினம் நீங்கள் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்தால் கூட பணம் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

 இதைப்பற்றி விளக்கினாலும் பலர் என்னிடம் பணமே இல்லை,  நான் ரொம்ப உஷார் ஏமாற மாட்டேன் என்று கூறுகிறார்கள்.  உண்மையாகவே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து இதிலிருந்து எல்லாம் தப்பி விட்டீர்கள் என்றால் மகிழ்ச்சிதான் ஆனால் ஒரு வேலை உங்களுக்கே தெரியாமல் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற அக்கறையில் தான் நான் இதை விளக்குகிறேன்.

 மகிழ்ச்சியுடன் டெலெக்ராமை பயன்படுத்துங்கள் எச்சரிக்கையாக இருங்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.


Thursday, May 4, 2023

Passwordன் மரணம்: இனி Passkey தான் எல்லாம்.

 

ஆமாம் நீங்கள் படிப்பது சரிதான்.  பாஸ்வோர்ட் எனும் தொழில்நுட்பத்தை ஒழித்துக் கட்டி புதிதாக Passkey  எனும் தொழில்நுட்பம் வந்துள்ளது.  வரும் காலத்தில் நாம் எதற்கும் Password  பயன்படுத்த வேண்டிய தேவையில்லை  ஆனால் பாதுகாப்பாக இணையத்தில் வளம் வர  ’பாஸ்கீ’யை பயன்படுத்த வேண்டும். 2023 ல்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்பம் இது.

 

ஏன் Passwordல் என்ன பிரச்சனை?

 உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்தத் தொழில்நுட்பத்தால் சில சிக்கல்கள் உண்டு, அதில் முதல் சிக்கல் மனிதர்கள்.  உலகம் முழுவதும் உள்ள மக்கள் வைத்திருக்கும் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா? “PASSWORD”  தான்.  சுமார் 46 சதவீத மக்கள் இதை பாஸ்வோர்டாக வைத்துள்ளார்கள்.  அடுத்த பாஸ்வோர்ட் “12345”.  இந்த பாஸ்வோர்ட் களை ஹேக்கர்கள் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.  இப்படி மக்கள் மிக எளிதான பாஸ்வேர்டுகளை வைப்பதால் சைபர் பாதுகாப்பில் ஏகப்பட்ட பிரச்சனை.


 அடுத்த சிக்கல். மக்கள் பல்வேறு கணக்குகளுக்கு ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவது.  இதில் நம் மக்களை எப்படி குறை சொல்ல முடியும்? நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்களில் பயணக் கணக்கு வைத்திருந்தால் எப்படி விதவிதமான பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க முடியும்?  ஒரே பாஸ்வர்ட் வைத்திருந்தால் தானே நினைவில் எளிதாக வைத்திருக்க முடியும்.  இதில் சிக்கல் என்னவென்றால்,  ஹேக்கர் ஒருவருடைய ஒரு பாஸ்வோர்ட் கண்டுபிடித்தால் போதும் அவர் உலாவரும் இணையத்தில் இருக்கும் அனைத்துச் செயலிகளின்/வலைதளங்களின் பாஸ்வேர்டுகளை கண்டுபிடித்ததற்கு ஈடானதாகும்.

 பாஸ்வேர்ட் பயன்படுத்துவதில் உள்ள இன்னொரு சிக்கல் ஹேக்கர்கள் உங்களை உணர்வுப்பூர்வமாக ஏமாற்றி உங்கள் பாஸ்வேர்டை எளிதாக வாங்கி விட முடியும்.

 பாஸ்வேர்ட் எனும் தொழில்நுட்பம் ஆரம்பக் காலத்தில் மிகப் பெரிய கணினி பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலும்,  தொடர்ந்து ஹேக்கர்கள் தங்கள் அறிவையும் திறனையும் மேம்படுத்தியதால் இந்தத் தொழில்நுட்பம் இப்போது பெரிதளவு உதவிகரமானதாக இல்லை. அதனால் நமக்கு வேறு ஒரு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.  அந்தத் தொழில்நுட்பம் தான் ’பாஸ்கீ.’


 இது திடீரென வந்த தொழில்நுட்பம் இல்லை. கடந்த வருடமே ஆப்பிள் போன்களில் இந்தத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இன்னும் ஆண்ட்ராய்டு போன்களில் இந்தத் தொழில்நுட்பம் வரவில்லை. ஆனால் இந்த வருடத்திற்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ’பாஸ்கீ’ தொழில்நுட்பம் என்றால் என்ன?

  அண்மைக்காலம் வளர்ந்து வரும் மொபைல் மற்றும் டேப்லெட் வருகையின் உதவியுடன் இந்தத் தொழில்நுட்பம் இயங்கும்.  உங்களுடைய மொபைல் ஃபோனில் நீங்கள் ’பாஸ்கீ’யை அமைத்துவிட்டால் போதும்.  எந்தெந்த வலைத்தளங்களில் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் கூற வேண்டும்.

 இந்த பாஸ்கீ தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட கிரிப்டோகிராபி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.  உங்கள் வாட்ஸ் அப் தொடர்பு முழுக்க முழுக்க பாதுகாப்பானது,  அதில் End-to-End Encryption உள்ளது எனக் கூறியிருப்பார்கள். பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ எனும் இரண்டு கருதுகோள்களை இணைத்தது தான் இந்த End-to-எண்டு Encryption  முறை.

வழக்கமான பாஸ்வேர்ட் தொழில்நுட்பத்தில் உங்களுக்கு ஒரு பயனர் பெயர் இருக்கும் அதனுடன் நீங்கள் பாஸ்வேர்டை சேர்த்து உள்ளிட வேண்டும்.  இங்கு அதற்குப் பதிலாக பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ இணைந்து செயல்படும்.  இந்த பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ யின் இணைவை மென்பொருளே பார்த்துக் கொள்ளும்.  நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்கள் வேலை சுலபம்.

ஒரே கட்டுபாடு நீங்கள் கண்டிப்பாக உங்கள் போனில் பின் நம்பர், பேட்டர்ன் அல்லது பயோமெட்ரிக் முறை உள்நுழைவை அமைத்திருக்க வேண்டும். கண்டிப்பாக. 


அது மிகச் சிக்கலான கணக்குகளை உருவாக்கி அந்தக் கணக்குகளைத் தமக்குள் தொழில்நுட்பமே தீர்த்துக் கொள்ளும் ஒரு முறை.  அந்த மென்பொருளில் என்ன நடக்கிறது என்பது யாருக்குமே தெரியாது.  ஒவ்வொரு முறையும் இந்தக் ’கணக்குகள்’ மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் ஒருவேளை ஹேக்கர் கையில் சிக்கினால் கூட அவரால் இந்தக் கணக்குகளைப் புரிந்து கொள்ள முடியாது (பார்க்கவே முடியாது).  இன்றளவும் ஹேக்கர்களிடமிருந்து மிகப் பாதுகாப்பான ஒரு தொழில்நுட்பம் தான் இந்த பப்ளிக் கீ மற்றும் பிரைவேட் கீ முறை.  அதை அப்படியே பாஸ்கீ முறைக்கும் பயன்படுத்துகிறார்கள்.

 உங்கள் மொபைல் போனில் இருக்கும் பாஸ்கீ தொடர்பான மென்பொருள்,  ஆரம்ப நேரத்தில் ஒரு பப்ளிக்கீயையும் பிரைவேட் கீயையும் உருவாக்கும்.  பப்ளிக் கீயை சர்வர்களில் பதிய வைத்து விடும்.   அதாவது நீங்கள் எந்த வெப்சைட்டில் இதைப் பயன்படுத்த வேண்டுமோ அந்த ஒவ்வொரு வெப்சைட்டிற்கும் இந்த பப்ளிக் கீ பதிய வைக்கப்படும்.

 நீங்கள் ஒரு வலைதளத்தில் நுழைய முற்பட்டால் அது உங்களின் பாஸ்கீயை கேட்கும்.  உங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது உங்கள் மென்பொருள் பார்த்துக் கொள்ளும்.  அந்த வலைதளம் பப்ளிக் கீயை வைத்து ஒரு சிக்கலான கணிதக் கேள்வியை உங்கள் மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கும்.  உங்கள் மொபைல் போனில் உள்ள மென்பொருள் பப்ளிக் கீயின் அடிப்படையில் அந்தக் கணிதத்தைத் தீர்க்க வேண்டும். தீர்த்து விடையை அனுப்பி வைக்கும்.  சர்வரில் விடையைச் சரி பார்க்கும்  வேலை நடக்கும்.  சரியான விடை என்றால் உங்களை அனுமதிக்கும்.  நீங்கள்  பட்டனை அழுத்திவிட்டு காத்திருக்க வேண்டியது தான். அனைத்தையும் மென்பொருளே பார்த்துக் கொள்ளும்.  சுருங்கச் சொன்னால் உங்களுக்கு உங்கள் பாஸ்கீ என்னவென்று தெரியவே தெரியாது.

 இதனால் ஒரு வேலை ஹேக்கர்கள் உங்கள் பாஸ்கீயை கேட்டால் உங்களுக்கே தெரியாது என்பதால் அந்த முறையில் உங்களை இனி ஹேக் செய்ய முடியாது.

 அடுத்து ஹேக்கர்கள் போலியான வலைத்தளங்களை அனுப்பினாலும் அந்த வலைதளங்களில் இந்த பாஸ்கி வேலை செய்யாது என்பதால் இனிமேல் உங்களை போலி வலைத்தளங்களை வைத்தும் ஏமாற்ற முடியாது.

 பாஸ் கீ மென்பொருளில்  உள்ள கீ-செயின் எனும் தொழில்நுட்ப உதவியுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணக் கணக்குகளை நீங்கள் எளிதாகப் பயன்படுத்த முடியும்.  ஒரு வேலை உங்களின் ஒரு நெட்ஃபிக்ஸ் பயனர் கணக்கை உங்கள் குடும்பத்தினருக்குப் பகிர வேண்டும் என்றால் அதையும் மிக எளிதாகவே பகிரலாம்.

 ஆனால் இதெல்லாம் உங்கள் மொபைல் போனிலும் அல்லது நீங்கள் பாஸ்கீயை பயன்படுத்தும் சாதனத்தில் மட்டும் தான் சாத்தியம்.

 ஒரு வேலை நீங்கள் முற்றிலும் மற்றொரு சாதனத்தில் உங்கள் ஈமெயிலை பார்க்க வேண்டும் என்றால் அதற்கும் உங்கள் மொபைல் போன் மற்றும் க்யூ ஆர் கோடு உதவியுடன் நீங்கள் அந்த புதிய சாதனத்தில் குறிப்பிட்ட வலைதளத்தை தாராளமாக உள் நுழைந்து பயன்படுத்தலாம்.

 ஓரளவு பாஸ்வோர்ட் தொழில்நுட்பம் முன்வைத்த பல சைபர் பாதுகாப்பு சிக்கல்களை இந்த பாஸ்கீ தொழில்நுட்பம் தீர்த்து வைத்துள்ளது.

 ஆனால் ஒருவேளை உங்கள் செல்போன் தொலைந்து விட்டால்?

 இதற்குத் தற்காலிகமான சில தீர்வுகளை முன் வைத்திருக்கிறார்கள்.  பாஸ்கீ ரெக்கவரி method எனும் முறையைப் பயன்படுத்தினாலும் இன்னும்  அது மிகச் சிக்கலாகத் தான் இருக்கிறது.  இப்போதைக்கு இந்தத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய சவால் இந்தச் சிக்கல்தான் இதையும் தீர்த்து விட்டால் மிக விரைவில் இந்தத் தொழில்நுட்பத்தை அனைத்து வலைத்தளங்களும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விடும்.

FIDO Alliance  எனும் ஆய்வுக் குழு தான் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இந்த பாஸ்கீ முறையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 1. Password Vs Passkey

2. Passkey explained in tamil

3. How to setup passkey in tamil

4. what is passkey




 




Tuesday, May 2, 2023

எச்சரிக்கை ‘Godfather of AI’ ஏன் கூகுளை விட்டு விளகினார்?

 


செயற்கை நுண்ணறிவின் பிதாமகர் என்று அழைக்கப்படும்  ஜெஃப்ரி ஹிட்டன்  கூகுளில் இருந்து தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.  அண்மைய காலம் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவை பற்றி மக்களுக்கு எச்சரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் வேலையை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார்.   அனைவரின் மத்தியிலும் இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஹின்டன் டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.  அப்போது அவர் செயற்கை நுண்ணறிவுக்கு அடிப்படையாக விளங்கும் கற்றல் இயந்திரங்களை உருவாக்க முனைந்தார்.  எந்திரங்கள் கற்க அடிப்படையான செயற்கை நரம்பியல் வலை நுட்பத்தை (Artificial neural network)  மேம்படுத்தினார்.  அவரின் சிந்தனையில் உருவானது தான் டீப் லேர்னிங் (Deep learning) எனும் தொழில்நுட்பம்.


 இவரின் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்ட பல முக்கிய நிறுவனங்கள் இவரை வேலைக்கு எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியது.  ஆனால் அவர்கள் மத்தியில் ஏலம் ஒன்றை ஏற்பாடு செய்தார்,  அதிகம் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தின் சேரப் போவதாக அறிவித்தார்.  ஏலத்தில் வென்றது கூகுள் நிறுவனம். 

 இவர் கூகுள் நிறுவனத்தில் இணைந்த பின் இவருடைய டீப் லேர்னிங் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவில் பல அசாத்திய சாதனைகளை நிகழ்த்தி காட்டியது.  கணினி பார்வை எனும் பிரிவிலும்,  உரையாடலுக்கு உதவும்  லார்ஜ் லாங்குவேஜ் மாடல் தொழில்நுட்பமும்  நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது. 

 இன்று பரபரப்பாக இருக்கும் சாட் ஜிபிடி இவரின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதுதான்.

 அண்மையகால சேட் ஜிபிடி வளர்ச்சி இவரை மகிழ்ச்சி அடையவில்லை.  மைக்ரோசாப்ட் நிறுவனம் சேட் ஜி பி டி யை வாங்கியதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் பதற்ற படத் தொடங்கியது.  அதனால் செயற்கை நுண்ணறிவின் ஆய்வுகளின் அறம் சார்ந்த முன்னெடுப்புகளை நிறுத்தியது.  எப்படியாவது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் போட்டி போட்டு ஜெயித்து விட வேண்டும் என்கிற முனைப்பில் எந்தவித அறம் இல்லாமல் வெற்றியை நோக்கி மட்டுமே கூகுள் நிறுவனம் சென்று கொண்டிருக்கிறது.

 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இப்படி வெறிபிடித்தார் போல் நம்மால் சமூகத்திற்கு அறிமுகப்படுத்த முடியாது என பல அறிஞர்கள் எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.  google உட்பட பல நிறுவனங்கள் இதைக் கண்டு கொள்வதில்லை.

 தான் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் நன்மைகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் அதன் தீமைகளைப் பற்றி நன்கு அறிந்தவரான ஜெஃப்ரி ஹிண்டன் கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்க விரும்பவில்லை.


 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான மிக விரிவான  கட்டுப்பாடுகள் மற்றும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் வேண்டும் என்பதை ஜெஃப்ரி உறுதியாக நம்பினார்.  ஆனால் கூகுள் நிறுவனத்தில் இருந்து இதை செய்ய முடியாது என்று உணர்ந்த அவர்  அதிக சம்பளம் கொடுக்கும் அந்த வேலையை உதவியுள்ளார்.

 உலகின் மிகப்பெரிய நிறுவனம்,  அளவிற்கு அதிகமான சம்பளம்,  தொழில்நுட்பத் துறையில் பிதாமகர் என்ற பெயர் இத்தனையையும் விட்டுவிட்டு ஜெஃப்ரி இண்டன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன் என்று வேலையை உதவியது அனைவருமே வியப்பாக பார்க்கிறார்கள்.  இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

 பல பத்திரிகை பேட்டிகளிலும் ஜெப்ரி இன்டர்ன் தொடர்ந்து அறம் பற்றி தான் பேசுகிறார்.  தொழில்நுட்பத்தை உருவாக்குவது மட்டும் தன் கடமை அல்ல அதை மக்களுக்கு நன்மை படுத்துவதாக மாற்றுவதும்,  அறம் சார்ந்து அந்த தொழில்நுட்பம் இயங்குகிறதா என்பதை கண்காணிப்பதும் கூட தன் வேலை தான் என்று அவர் உலகிற்கு சொல்லாமல் சொல்லி உள்ளார்.

Chatgpt,Bard AI ரகசியம்: கூகுள் ஏன் டிமிண்ட் கெபுருவை நீக்கியது?


வினோத் ஆறுமுகம்- சைபர் புத்தா


 

Assistive Tech: பார்வையற்றவர்களுக்கு பார்வையாகும் AI Cloud

  ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன்.  கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக...