Thursday, April 20, 2023

செயற்கை நுண்ணறிவு பக்தி ரோபோட்கள் அவை உருவாக்கும் ரோபோட் கடவுள்

 Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிகள் நம்மை சுற்றி பல நூறாக பெருகிவிட்டது.  நம் செல்போனில் செயற்கை நுண்ணறிவு உள்ளது,  விரைவில் நம் வண்டிகளில் வந்துவிடும்.  நாளை நம் சமையல் கட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி முதல் கேஸ் ஸ்டவ் வரை செயற்கை நுண்ணறிவு சாதனமாக மாற வாய்ப்புகள் உள்ளது.  இப்படி அனைத்திலும் நுழைந்த செயற்கை நுண்ணறிவு பூஜை அறையில் நுழையக் கூடாதா?


 இதை தான் பக்தி செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் என அழைக்கிறார்கள்.  நீங்கள் சாட் ஜிபிடி பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.  செயற்கை நுண்ணறிவு அரட்டை ரோபோட்.  இதன் மாதிரியைக் கொண்டு கீதா ஜி பி டி என்னும் மென்பொருளை சிலர் உருவாக்கியுள்ளார்கள்.  இந்த மென்பொருளில் நீங்கள் பகவத் கீதை தொடர்பான கேள்விகளை கேட்டால் அதற்கான பதில்களை அந்த மென்பொருள் அளிக்கும்.  இந்து மதம் என்று இல்லை பிற மதங்களும் இனி செயற்கை நுண்ணறிவை தங்கள் மத சேவைக்காக பயன்படுத்த விருப்பம் காட்டி வருகிறார்கள்.

 ரோபோட்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்து கோவில்களுக்குள் நுழைந்து விட்டது.  ஆரத்தி எடுக்கும் ரோபோட், பூஜையின் போது மணி ஆட்டும் ரோபோட்,  என நம் கோயில்களில் ரோபோட்களை பார்த்திருக்கிறோம்.

 அண்மையில் கேரளாவில் யானையைப் போன்றரோபோடை உருவாக்கி அனைவரின் பாராட்டை பெற்றார்கள்.  இதனால் ஒரு கோவிலில் யானை செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் ரோபோட்  யானை மிகவும்   பக்தியுடன் செய்யும் அதே நேரம் ஒரு யானையை நீங்கள் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்த தேவையில்லை.  விலங்கு நல ஆர்வலர்கள் மிகவும் ஹேப்பி அண்ணாச்சி..

செயற்கை நுண்ணறிவு பக்தி ரோபோட்களா இன்னொரு பயன் 

பாதிரியார் வேலையையும் அர்ச்சகர் வேலையையும் இனி

ரோபோட்களை அற்புதமாக செய்துவிடும்.  மசூதிகளில்

இந்த ரோபோட்கள் நல்ல பயன் தரும்.  இந்த மதம் அந்த

மதம் என்றில்லாமல் அனைத்து மதத்திலும் மத

சொற்பொழிவுகள்,  மதவாசிப்புகள் மதக்கருத்துக்களை 

எடுத்துச் சொல்வது,  அதற்கான பதில் சொல்வது,  

மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்வது  என பல வேலைகளை

இனிமேல் ரோபோட்கள் செய்து விடும்.


 ஆனால் செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருட்கள் அல்லது ரோபோட்கள் சமய சடங்குகளுக்கு பயன்படுத்துவதைப் பற்றி கவலை தெரிவிக்கிறார்கள் ஆய்வறிஞர்கள்.

இப்போதைக்கு உள்ள செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களைப் போல சிந்திக்கும் மென்பொருள் அல்ல இது முழுக்க முழுக்க கணித அடிப்படையிலான மனிதர்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் வேலையை செய்யும் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள்.

 ஒரு பக்கம் பக்தி என்பது நம்முடைய பகுப்பாய்வும் மூளையை கொஞ்சம் அடக்கி உணர்வுபூர்வமான மூளையை முன்னிலைப்படுத்துவது தான்.  மீண்டும் மீண்டும் மதச் சடங்குகளை கேள்வி கேட்காமல் செய்வதைத்தான் நாம் பெரும்பாலும் பக்தி என்று மக்களை நம்ப வைத்து இருக்கிறோம்.  அப்படி என்றால் இந்த ரோபோட்கள் மனிதர்களை விட மிகப்பெரிய பக்திமான்களாக உருவாக வாய்ப்பு இருக்கிறது.


 இதில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் என்பதை நாம் கவனித்தால் ஒரு வேலை வருங்காலத்தில் ரோபோட்கள் ஒரு புது கடவுளையோ மதத்தையும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் இருக்கிறது.  ரோபோக்கள் உருவாக்கும் அந்த ரோபோ கடவுள் கண்டிப்பாக சிந்தனை தொடர்பான விஷயங்களுக்கு மிகவும் தூரமானதாக இருக்கும் அதே நேரம் திரும்பத் திரும்ப கமெண்ட் களுக்கு கட்டுப்படும் பல புதிய மதச் சடங்குகளை கூட இந்த ரோபோக்கள் உருவாக்கலாம் என கூறுகிறார்கள்.

மனிதர்கள் சிந்திப்பதை மறந்து பகுத்தறிவதை மறந்து ஒரு எந்திரமாக மாறுவதும்.  ஒரு எந்திரம் கடவுளாக மாறுவதும்  நடக்கும் போது இனி கடவுள் தான் மனிதனாக வேண்டும் அப்படியானால் தான் மனித சமூகத்தை காப்பாற்ற முடியும் போல.. 


Monday, April 17, 2023

இந்தியாவில் தாக்கப்படும் வாடகை கார் டிரைவகளும் , உணவு டெலிவரி நபருகளும்



அதிகாலை 2 மணி தன் உபர் காரை எடுத்து வந்து டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் பகுதியில் கஸ்டமர் வருகைக்காகக் காத்திருந்தார். குளிர் அவர் முதுகை சில்லிட செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு செங்கல் அவர் முகத்தைப் பதம் பார்த்தது. இரண்டு பேர் திடீரென வந்து தேவியை தாக்கத் தொடங்கினார்கள். அன்றைய நாள் முழுவதும் அவர் ஓட்டி சம்பாதித்த பணத்தை பறித்தனர். தொலைப்பேசியைப் பிடுங்கும் முயற்சியில் அவர் கை உடைந்தது. உபர் நிறுவனத்தின் அவசர உதவிக்குத் தொடர்பு கொண்டார். உபர் நிறுவனம் இரண்டு நாள் கழித்து. தேவி தாக்கப்பட்ட செய்தி பரபரப்பாகிய பின் அந்த எமர்ஜென்சி உதவி அழைப்பிற்கு பதிலளித்தது .

தேவியின் சோக கதையிலிருந்து மீள்வதற்குள் ஐதரபாதில் ரிஸ்வான் என்ற ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் இளைஞர், 23 வயதிருக்கும்.  உணவு டெலிவரி செய்ய மூன்றாம் மாடிக்குச் சென்றார். மாடியில் திறந்துவிட பட்ட நாயிடம் சிக்கிவிட்டார். ஓட வழி இல்லாமல் மேலே இருந்து குதித்துவிட்டார். பலத்த அடி. சில நாட்களில் சிகிச்சையில் இறந்துவிட்டார். அதே நகரில் ஓலா கார் ஓட்டுநருக்கும் வாடிக்கையாளருக்கும் கட்டணத்திற்காக நடந்த வாக்கு வாதத்தில் தாக்கப்பட்ட வெங்கடேஷ் எனும் ஓட்டுநர் கோமாவில் உள்ளார்.


செக்யுரிட்டி, போலிஸ் முதல் கஸ்டமர்கள் வரை தாங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அவமதிக்கப்படுவதாகவும் டிரைவர்கள், டெலிவரி நபர்கள் புகார் கொடுத்தும் யாரும் கண்டுக்கொள்வதில்லை. இது போன்ற தாக்குதல்கள் மரணம் வரை செல்கிறது.   

அதுமட்டுமல்ல கஸ்டமர் போல் வண்டியை புக் செய்து தாககி பணம் பறிப்பது, வனடியை திருடுவது. உனவு டெலிவரி செய்ய வருபவர்களை அவமானபடுத்துவது என்பது நடக்கிறது.

உலகம் முழுக்க இவை இருக்கிறது என்றாலும் இந்தியாவில் சாதி மத ரீதியான வெறுப்பும் சேர்ந்துக்கொள்கிறது.ஒரு ஆய்வில் இந்த வேலையில் ஈடுபடும் 3ல் 1 வருவர் இது போன்ற சம்பவங்களை எதிர்க்கொண்டதாக சொல்கிறது.


இந்தியாவில் பல இடங்களில் முஸ்லிம் டெலிவரி ஏஜெண்ட், டிரைவர்கள் என்றால் கஸ்டமர்கள் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். இசுலாமிய டெலிவரி இளைஞர் ஒருவரை வழி மறித்து தாக்கி உணவை எடுத்து சென்றுவிட்டார்கள். போலிஸ் கம்பளைண்ட் கொடுக்கபட்டது அவ்வளவு தான்.

இந்தியாவில் இருக்கும் சில சங்கங்கள் இதை பற்றி குரல் கொடுத்தாலும், நிறுவனங்களிடமிருந்து பெரிய உதவிகள் இல்லை. இவர்கள் தக்காப்பட்டலும் பெரிய இன்சுரன்ஸ் இல்லை. அப்படி இருந்தாலும் இன்சுரன்ஸ் தொகை வாங்குவதற்குள் நிலமை மோசமாகிவிடும்.


இசுலாமிய வெறுப்பு,சாதி ரீதியான அவமானம். தாக்குதல் என்பது இவர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. இந்தியாவில் 2023ல் சுமார்  2 கோடி பேர் இந்த சர்வீஸ் வேலையில் ஈட்பட்டுள்ளார்கள். இன்னும் பத்தாண்டுகளில் இது மும்மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவர்களுக்கு அரசு சார்ந்த   பெரிய உதவிகள் இல்லை, போலிஸ் மதிகாது. கஸ்டமர்கள் வெறுப்பார்கள், நிறுவனம் பாதுகாப்பளிப்பதில்லை;. இவை முழுவதும் ஒழுங்கப்படுத்த பட வேண்டும், குறைந்தபட்சம் இவர்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதற்க்கு.

 





Wednesday, April 12, 2023

How to configure and use autogpt

AutoGPT is a library built on top of the PyTorch and Hugging Face Transformers frameworks that provides an easy-to-use interface for training and fine-tuning large language models. Here are the steps to configure and use AutoGPT:

  1. Install AutoGPT: You can install AutoGPT using pip. Open a command prompt and run the following command:


 pip install autogpt


2. Load the dataset: AutoGPT supports loading datasets from various sources such as CSV files, JSON files, and Pandas dataframes. You can use the autogpt.data module to load your dataset. For example, to load a CSV file, you can use the following code:

Java
from autogpt.data import CsvDataset dataset = CsvDataset('path/to/csv/file', 'text_column_name')

3. Create a configuration file: AutoGPT uses a configuration file to specify the hyperparameters for the training process. You can create a configuration file in YAML format. Here's an example configuration file:

YAML
model: architecture: gpt2-medium dropout: 0.1 attention_dropout: 0.1 num_layers: 12 num_heads: 12 hidden_size: 768 activation_function: gelu max_position_embeddings: 1024 training: batch_size: 16 learning_rate: 5e-5 num_epochs: 3

4. Train the model: Once you have loaded your dataset and created a configuration file, you can train your model using the autogpt.training module. Here's an example code snippet:

Java

from autogpt.training import Trainer trainer = Trainer('path/to/configuration/file', dataset) trainer.train()

5. This will start the training process using the specified configuration and dataset.
Use the model for inference: Once the model is trained, you can use it for generating text. You can use the autogpt.inference module to generate text from the trained model. Here's an example code snippet:

Python

from autogpt.inference import GptGenerator generator = GptGenerator('path/to/trained/model') generated_text = generator.generate_text('prompt', max_length=100) print(generated_text)

This will generate text starting from the specified prompt and with a maximum length of 100 tokens.


Assistive Tech: பார்வையற்றவர்களுக்கு பார்வையாகும் AI Cloud

  ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன்.  கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக...