Thursday, April 20, 2023

செயற்கை நுண்ணறிவு பக்தி ரோபோட்கள் அவை உருவாக்கும் ரோபோட் கடவுள்

 Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிகள் நம்மை சுற்றி பல நூறாக பெருகிவிட்டது.  நம் செல்போனில் செயற்கை நுண்ணறிவு உள்ளது,  விரைவில் நம் வண்டிகளில் வந்துவிடும்.  நாளை நம் சமையல் கட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி முதல் கேஸ் ஸ்டவ் வரை செயற்கை நுண்ணறிவு சாதனமாக மாற வாய்ப்புகள் உள்ளது.  இப்படி அனைத்திலும் நுழைந்த செயற்கை நுண்ணறிவு பூஜை அறையில் நுழையக் கூடாதா?


 இதை தான் பக்தி செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் என அழைக்கிறார்கள்.  நீங்கள் சாட் ஜிபிடி பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.  செயற்கை நுண்ணறிவு அரட்டை ரோபோட்.  இதன் மாதிரியைக் கொண்டு கீதா ஜி பி டி என்னும் மென்பொருளை சிலர் உருவாக்கியுள்ளார்கள்.  இந்த மென்பொருளில் நீங்கள் பகவத் கீதை தொடர்பான கேள்விகளை கேட்டால் அதற்கான பதில்களை அந்த மென்பொருள் அளிக்கும்.  இந்து மதம் என்று இல்லை பிற மதங்களும் இனி செயற்கை நுண்ணறிவை தங்கள் மத சேவைக்காக பயன்படுத்த விருப்பம் காட்டி வருகிறார்கள்.

 ரோபோட்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்து கோவில்களுக்குள் நுழைந்து விட்டது.  ஆரத்தி எடுக்கும் ரோபோட், பூஜையின் போது மணி ஆட்டும் ரோபோட்,  என நம் கோயில்களில் ரோபோட்களை பார்த்திருக்கிறோம்.

 அண்மையில் கேரளாவில் யானையைப் போன்றரோபோடை உருவாக்கி அனைவரின் பாராட்டை பெற்றார்கள்.  இதனால் ஒரு கோவிலில் யானை செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் ரோபோட்  யானை மிகவும்   பக்தியுடன் செய்யும் அதே நேரம் ஒரு யானையை நீங்கள் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்த தேவையில்லை.  விலங்கு நல ஆர்வலர்கள் மிகவும் ஹேப்பி அண்ணாச்சி..

செயற்கை நுண்ணறிவு பக்தி ரோபோட்களா இன்னொரு பயன் 

பாதிரியார் வேலையையும் அர்ச்சகர் வேலையையும் இனி

ரோபோட்களை அற்புதமாக செய்துவிடும்.  மசூதிகளில்

இந்த ரோபோட்கள் நல்ல பயன் தரும்.  இந்த மதம் அந்த

மதம் என்றில்லாமல் அனைத்து மதத்திலும் மத

சொற்பொழிவுகள்,  மதவாசிப்புகள் மதக்கருத்துக்களை 

எடுத்துச் சொல்வது,  அதற்கான பதில் சொல்வது,  

மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்வது  என பல வேலைகளை

இனிமேல் ரோபோட்கள் செய்து விடும்.


 ஆனால் செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருட்கள் அல்லது ரோபோட்கள் சமய சடங்குகளுக்கு பயன்படுத்துவதைப் பற்றி கவலை தெரிவிக்கிறார்கள் ஆய்வறிஞர்கள்.

இப்போதைக்கு உள்ள செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களைப் போல சிந்திக்கும் மென்பொருள் அல்ல இது முழுக்க முழுக்க கணித அடிப்படையிலான மனிதர்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் வேலையை செய்யும் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள்.

 ஒரு பக்கம் பக்தி என்பது நம்முடைய பகுப்பாய்வும் மூளையை கொஞ்சம் அடக்கி உணர்வுபூர்வமான மூளையை முன்னிலைப்படுத்துவது தான்.  மீண்டும் மீண்டும் மதச் சடங்குகளை கேள்வி கேட்காமல் செய்வதைத்தான் நாம் பெரும்பாலும் பக்தி என்று மக்களை நம்ப வைத்து இருக்கிறோம்.  அப்படி என்றால் இந்த ரோபோட்கள் மனிதர்களை விட மிகப்பெரிய பக்திமான்களாக உருவாக வாய்ப்பு இருக்கிறது.


 இதில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் என்பதை நாம் கவனித்தால் ஒரு வேலை வருங்காலத்தில் ரோபோட்கள் ஒரு புது கடவுளையோ மதத்தையும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் இருக்கிறது.  ரோபோக்கள் உருவாக்கும் அந்த ரோபோ கடவுள் கண்டிப்பாக சிந்தனை தொடர்பான விஷயங்களுக்கு மிகவும் தூரமானதாக இருக்கும் அதே நேரம் திரும்பத் திரும்ப கமெண்ட் களுக்கு கட்டுப்படும் பல புதிய மதச் சடங்குகளை கூட இந்த ரோபோக்கள் உருவாக்கலாம் என கூறுகிறார்கள்.

மனிதர்கள் சிந்திப்பதை மறந்து பகுத்தறிவதை மறந்து ஒரு எந்திரமாக மாறுவதும்.  ஒரு எந்திரம் கடவுளாக மாறுவதும்  நடக்கும் போது இனி கடவுள் தான் மனிதனாக வேண்டும் அப்படியானால் தான் மனித சமூகத்தை காப்பாற்ற முடியும் போல.. 


No comments:

Post a Comment

Assistive Tech: பார்வையற்றவர்களுக்கு பார்வையாகும் AI Cloud

  ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன்.  கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக...