என் நண்பர் ஒருவருக்கு வயிற்று வலி. மூன்று நாளுக்கு மேல் வலி தொடர்ந்தது. ஆனாலும் அவர் மருத்துவரிடம் போகவில்லை. அலுவலகத்தில் இருக்கும்போதே இணையத்தில் வயிற்று வலி பற்றிய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படித் தேடிய ஒரு தளத்தில், வயிற்றுவலி தொடர்பான மேலும் சில அறிகுறிகளைப் பட்டியல் இட்டிருந் தார்கள். நண்பருக்கு அனைத்தும் இருப்பதுபோல் ஒரு பிரமை சூழ்ந்தது. இறுதியில் அவருடைய வயிற்றில் கேன்சர் இருப்பதாக, அவரே உறுதி செய்துகொண்டு நேராகப் புற்றுநோய் நிபுணரிடம் சென்றுவிட்டார்.
பல பரிசோதனைகள், பல மருத்துவர் களைக் கண்ட பின் அவருக்கு இருந்தது வாயுத் தொல்லை என்றும், அத்துடன் லேசாக வயிற்றுப் புண்ணும் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய மருந்துகளைச் சாப்பிட்ட சில வாரங்களில் அவருக்குச் சரியாகிவிட்டது. ஆனால், அவருடைய அதீதப் பயத்தைப் போக்கத்தான் இப்பொழுது மனநல மருத்துவரிடம் போய்க்கொண்டிருக்கிறார். இந்த அவலம் தேவையா?மாறாத வதந்திகள்நம்பிக்கை சார்ந்த மருத்துவக் குறிப்புகள், வதந்திகள், மூடநம்பிக்கை கள் போன்றவை எல்லாம் திடீரெனப் பிறந்தவை அல்ல. காலம் காலமாக இருப்பவைதான். ஆனால் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் முன்னைவிட அவை அதிவேகமாகப் பரவி விடுகின்றன. புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருவதால் பலர் அதை நம்பவும் செய்கிறார்கள் என்பதுதான் இதில் அவலம். “வாட்ஸ்அப்பில் வந்தால் சரியாகத்தான் இருக்கும்” எனப் பலரும் தீவிரமாக நம்புகிறார்கள். அத்துடன் இணையத்தில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு மருத்துவர்களிடம் சந்தேகத்துக்கு மேல் சந்தேகங்களைக் கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள்.தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்று உலகையே சிறு கிராமமாக்கி விட்டது. சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட் போன், வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் வருகையால், விரல் நுனியில் தகவல்கள் குவிந்துவிடுகின்றன. விஞ்ஞானத்தின் வளர்ச்சி நன்மைகளைக் கொண்டுவந்தாலும், அதை முறைகேடாகப் பயன்படுத்த நினைப்பவர்களால் சமூகத்தில் பல குழப்பங்களும் உருவாகின்றன. அதில் முக்கியமான ஒன்று மருத்துவர்களைச் சமீப காலமாகப் பாடாய்ப்படுத்தும் தவறான மருத்துவத் தகவல்கள், வதந்திகள்.என்னுடைய நண்பர் ஒருவர் தன் மகனின் வலிப்பு பிரச்சினைக்காக மனநல மருத்துவர் ஒருவரிடம் சென்றிருந்தார். மருத்துவர் பரிசோதித்துவிட்டுச் சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். அதற்கு முன்பே என் நண்பர் தன் ஸ்மார்ட்ஃபோனில், இணையம் வழியாகச் சில தகவல்களைப் படித்துவிட்டு, “டாக்டர் இந்த மருந்தை உட்கொண்டால், லிவர் கெட்டுபோய்டுமாமே? சாப்பிடலாமா?” என்று கேட்டிருக்கிறார்.அரைகுறை அறிவுமருத்துவர்களிடம் சந்தேகம் கேட்கக் கூடாது என்பதல்ல. ஒவ்வொரு நோயாளிக்கும் தனக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை பற்றித் தெரிந்துகொள்ள முழு உரிமை இருக்கிறது. அரைகுறை அறிவுடன் மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு எழுப்பப்படும் சந்தேகங்கள்தான் இங்கே பிரச்சினை.கோபமடைந்த மருத்துவர் “மருந்தைச் சாப்பிடவில்லை என்றால், மூளை கெட்டுப்போய்டும் பரவாயில்லையா?” என்று பதிலுக்குக் கேட்டாராம்.முதலில் டிஜிட்டல் வழியாகப் பார்க்கும் மருத்துவத் தகவல்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை அப்படியே நம்ப வேண்டாம். அந்தத் தகவல்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களால், மருத்துவ இணையதளங்களிலோ அல்லது அரசிடமிருந்தோ வந்திருக்கின்றனவா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது நம்மிடம் நல்ல உறவைப் பேணும் மருத்துவரிடம் அது பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மாறாக, நச்சரிப்பது நல்ல விளைவைத் தராது.என்ன செய்வது?இணையதளங்களில் ஒரு நோய் குறித்து அனைத்து விதமான சாத்தியங்களிலும் பட்டியலிட்டிருப்பார்கள். இப்படிப்பட்ட இணையதளங்களின் நோக்கம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளச் செய்வது மட்டும்தான். சுய மருத்துவம் பார்த்துக்கொள்வதற்கு அல்ல. இணையத்தைப் பார்த்து நோயைச் சுயநிர்ணயம் செய்துகொள்வதும், அதற்கு நாமே மருத்துவம் பார்த்துக்கொள்வதும் பேராபத்தை விளைவிக்கக்கூடும். முறையான சிகிச்சைக்கான காலதாமதமும், தவறான சுயசிகிச்சையும் மீள வழியில்லாத நிலைக்கு நம் உடலைக் கொண்டுபோகும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.அடுத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் அல்லது வலைத்தளத்தில் ஒரு தகவல் கூறப்பட்டிருந்தாலும் அது பொதுவான தகவலாக இருக்கலாம். எல்லோருக்கும் அதே அறிகுறிகள், அதே பக்கவிளைவுகள் ஏற்பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.மற்றொரு முக்கியப் பிரச்சினை வாட்ஸ்அப்பிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பரவும் தகவல்கள் அனைத்தும் அப்படியே உண்மை என்று நம்புவதுதான்.இணையப் போலி மருத்துவர்கள்மருத்துவத் தெளிவுமாற்று மருந்துகள், பாரம்பரிய மருந்துகள், எய்ட்ஸுக்கு மருந்து, புற்றுநோய்க்கு மருந்து என்று போலி மருத்துவர்களும், அவர்களுடைய மருத்துவக் குறிப்புகளும் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. அவை வாட்ஸ்அப்பிலும் வலம் வருகின்றன. புற்றுநோய்க்கு அகத்தியர் கூறிய சித்த மருத்துவக் குறிப்பு என்றொரு தகவல் வாட்ஸ்அப்பில் வருவதாகவும், பல புற்றுநோயாளிகள் அதை நம்பி மருத்துவம் பார்த்துக்கொள்ள மறுப்பதாகவும் எனக்குத் தெரிந்த சித்த மருத்துவர் ஒரு முறை வருத்தப்பட்டார். ‘மாற்று மருத்துவர்கள்’ என்ற பெயரில் சில போலிகள் முன்பு பிட் நோட்டீஸ் வழியாகவே கணிசமாகப் பரவினார்கள். வாட்ஸ்அப் அவர்களுடைய வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க வைத்துவிட்டது.பொதுவாக ஒருவருடைய ஒவ்வாமைகளை உறுதி செய்த பின்னரே மருத்துவர்கள் மருந்தைப் பரிந்துரைப் பார்கள். நாமும் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். மருந்தை உட்கொண்ட பின் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்தால், மருத்துவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.அதேநேரம், இணையத்தில் கூறப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் குறிப்புகள்கூடப் பொதுவானவைதான். அதைப் படித்து அஞ்சத் தேவையில்லை. அது பெரும்பாலும் மருத்துவர்களுக்கான குறிப்புகள்தான். சில மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது ஒவ்வாமை பற்றிய தகவல்களும் இணையத்தில் இருக்கும்.ஒரு விஷயம் மக்களின் பெரும்பான்மை பயன் பாட்டுக்கு வந்துவிட்டாலே அதைப் பற்றிய ஒரு கொள்கை, சட்டம், வழிகாட்டிகளை அரசு உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்பொழுது டிஜிட்டல் மருத்துவ வதந்திகள் பரவலுக்கு எதிராக அரசுடன் இணைந்து மருத்துவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தளங்கள், உதவிகள் மூலம் தவறான தகவல்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவை உடனடி மருந்துமருத்துவ மாணவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் உதவியுடன் இதை மேற்கொள்ளலாம். போலியான மருத்துவத் தகவல்கள், மருத்துவ வதந்திகள் ஏற்படுத்தும் மன உளைச்சலும், பயமும், தகவல் தொழில் நுட்பம் கொண்டு வந்திருக்கும் புது வகை நோய்க் கிருமி. அதைத் தகவல் தொழில்நுட்பத்தை வைத்தே எதிர்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம்.- வினோத் ஆறுமுகம்நன்றி Tamil The Hindu
Tuesday, May 16, 2023
குழப்பம் விளைவிக்கும் ‘கூகுள் டாக்டர்’
Monday, May 15, 2023
எச்சரிக்கை! Telegramல் இலவசமாக படம் பார்ப்பவரா?
Telegram இல் உங்களுக்கு ஏன் ஒருவர் இலவசமாக படங்களை கொடுக்க வேண்டும்? ஒரு படத்திற்கு டிக்கெட் செலவு ஆகக்கூடாது, ஒரு ஓடிடிக்கு சப்ஸ்கிரைப் பணம் கொடுக்க வேண்டாம் என்று நீங்களே பணத்தை மிச்சம் பிடிக்க telegramல் படத்தை டவுன்லோடு செய்கிறீர்கள். உங்களுக்கு பணம் மீது எவ்வளவு அக்கறை இருக்கும்போது உங்களுக்கு இலவசமாக கொடுப்பவர் மட்டும் சமூக சேவையா செய்வார்?
டெலிகிராமில் படங்களை தரவிறக்கம் செய்வதிலும் பலவிதமான பாட்களை அதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளது அதைப்பற்றி நாம் தெரிந்து கொண்டு எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
telegram என்பது இன்று பலராலும் பயன்படுத்தப்படும் சேட் ஆப். உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. தகவல் பரிமாற்றத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் மிக முக்கியமான செயல் இது என பலர் நினைக்கிறார்கள். ஆனால் டெலிகிராமில் எதிர்பாராத விதமாக ஒரு முழு திரைப்படத்தையும் பகிரும் அளவு வசதிகள் உள்ளது. இதனால் விரைவிலேயே டெலெக்ராம் செயலி என்பது இலவசமாக புதிய படங்களை தரவிறக்க பயன்படுத்தப்பட்டது.
தமிழ் ராக்கர்ஸ் அடுத்தபடியாக இன்று டெலிகிராமில் உலகம் முழுவதும் உள்ள படங்கள் மற்றும் ஓடிடி களில் வெளிவரும் வெப் சீரியஸ்கள் பகிரப்பட்டும் தரவிறக்கப்பட்டும் வருகிறது இதற்காக யாரும் பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.
ஆனால் இதற்கு ஒரு மறுபக்கம் உள்ளது.
இந்த இலவச படங்களின் மூலம் சைபர் கிரிமினல்கள் ஏற்கனவே உங்கள் ஃபோன்களிலும் லேப்டாப் களிலும் நுழைந்து விட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
சைபர் கிரிமினல்களை பொருத்தவரை அவர்களுக்கு ஒரு போன் உள்ளும் லேப்டாப் உள்ளும் நுழைவது மிகவும் கடினமான ஒரு செயல் அப்படி அவர்கள் நுழைந்து விட்டால் உடனடியாகவோ அல்லது பல நாட்கள் உங்கள் பூனை வேவு பார்ப்பதின் பல லாபங்கள் உண்டு.
நேரடியாக உங்கள் பணத்தை திருடுவது.
உங்களைப் பற்றிய தகவல்களைத் திருடி அதை டார்க் நெட்டில் விற்பதின் மூலம் பணம் பார்ப்பது.
உங்களை மெல்ல வேவு பார்ப்பது.
உங்களை ஏமாற்றி தவறான விஷயங்களில் முதலீடு செய்ய வைப்பது.
ரான்சம்வேர் எனும் முறையில் உங்கள் போனை முடக்கி பணயமாக பணம் கேட்பது.
மேலே நாம் பார்த்த சைபர் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் மால் பெயர்களை உங்கள் போனில் செலுத்த வேண்டும். மால் வேர்களை லிங்க் மூலம் அனுப்பி நீங்கள் கிளிக் செய்தால் தான் அந்த மால்வர் உங்கள் போன் அல்லது லேப்டாப்பில் நுழையும். அவ்வளவு எளிதாக நீங்கள் கிளிக் செய்து விட மாட்டீர்கள். ஒருவரை அந்த கிளிக் செய்ய வைக்க சைபர் கிரிமினல்கள் பல உளவியல் வழிமுறைகளை பின்பற்றுவார்கள்.
ஆனால் இந்த இலவச திரைப்படங்கள் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.
இதை நீங்கள் புரிந்து கொள்ள சைபர் கிரைமில் இரண்டு விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,
Malware Bundling
Malvertising
Malware Bundling: இந்த முறையில் மால்வேர்களை உண்மையான அப்ளிகேஷன் ஓடும் அல்லது திரைப்படம் பாடல்களோடும் இணைத்து சேர்த்து விடுவார்கள். இதனால் நீங்கள் குறிப்பிட்ட பாடலையும் படத்தையும் தரவிருக்கும் போது அதனுடனே மாபெரும் உங்கள் லேப்டாப் அல்லது ஃபோனில் டவுன்லோட் ஆகிவிடும்.
ஒரு மால்வேர் என்பது தீங்கான செயலி. அது உள்ளே வந்து விட்டால் போதும் உங்கள் ஒப்புதலுக்காக காத்திருக்காது நேரடியாக போய் உங்கள் போனை அடிமட்டம் வரை ஹேக் செய்து விடும்.
Malvertising: Telegramல் படம் டவுன்லோட் செய்த அனைவருமே இந்த Malvertisingஐ பார்த்திருப்பீர்கள். தீங்கான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட அட்வர்டைஸ்மென்ட் பக்கம் தான் Malvertising page. Malvertising என்றால் malicious advertising என பொருள்.
நீங்கள் படத்தை டவுன்லோட் செய்யும் பக்கத்தில் “DOWNLOAD” என்ற வார்த்தை அல்லது பட்டன்கள் பல இருக்கும் அதில் தெரியாமல் நீங்கள் ஒரு டவுன்லோட் பட்டனை அழுத்தி விட்டால் உங்களுக்கே தெரியாமல் தீங்கான செயலி உங்கள் போனுக்குள் நுழைந்து விடும். நிற்க இப்போதெல்லாம் இந்த பக்கத்தை நீங்கள் திறந்தாலே அந்த நொடியில் தீங்கான செயலிகள் உங்கள் போனுக்குள் நுழைந்து உங்கள் போனை ஹேக் செய்து இருக்கும்.
இதைப்பற்றி நான் விளக்கும் போது பலரும் என் போனில் என்ன இருக்கிறது? என்னிடம் பணமே இல்லை. அவர்கள் ஹேக் செய்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகட்டும் என்று அலட்சியமாக கூறுவார்கள். உங்கள் போனில் உங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது மிகக் குறிப்பாக உங்களைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் இருக்கிறது இந்த தகவல்களை வைத்து உங்களை மிக எளிதாக குறி வைக்க முடியும். அனைத்துமே ஒரு நொடியில் பணம் திருடுவதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறார்கள். அப்படியல்ல ஹாக்கர்கள் வேவு பார்த்து உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி டார்க் நெட்டில் விற்கலாம்.
இல்லை என்றாலும் உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி உங்களுக்கே தெரியாமல் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் போன் நம்பர்களையும் திருடி அவர்களுக்கு உங்களை உங்களிடம் இருந்து தவறான செய்திகளை அனுப்பி அவர்கள் போன்களையும் மிக எளிதாக ஹேக் செய்து விட முடியும். யோசித்துப் பாருங்கள் உங்கள் குடும்பத்தினரும் இதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேலை உங்கள் போனில் குடும்பத்தில் இருப்பவர்களின் பெண்களின் புகைப்படங்களோ குழந்தைகளின் புகைப்படங்கள் இருக்கிறது என்றால் அது டார்க் நெட்டில் மிகப்பெரிய விற்பனைக்கான பொருள். உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டின் பெண்கள் குழந்தைகளை ஆபத்தில் சிக்க வைத்து விட்டீர்கள்.
அடுத்ததாக இலவச திரைப்படங்கள் தரவிறக்கம் செய்வதற்காக நீங்கள் பல்வேறு டெலிகிராம் குழுக்களில் சேர வேண்டி இருக்கும். அப்படி சேர்ந்த குழுக்களைப் பற்றி நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம் ஆனால் கொஞ்சம் கவனித்து பாருங்கள் அவை மெல்ல மெல்ல போலியான டிரேடிங் குழுக்களாக மாறி இருக்கும்.
இலவசமாக படங்களை தரவிறக்கம் செய்யும் பெண்களை குறி வைத்து இந்த டிரேடிங் குழுக்கள் இயங்குகின்றன. ஒரு பக்கம் அந்தப் பெண்களின் அந்தரங்க தகவல்கள் புகைப்படங்கள் சைபர் கிரிமினல்களுக்கு ஒரு வியாபாரம் என்றால். மறுபக்கம் அப்பாவியான பெண்களும், அல்லல்படும் ஊழியர்களும் இவர்களின் குறி.
இலவச திரைப்படங்கள் என்று டிரேடிங் குழுக்களாக மாற்றப்பட்ட பல்வேறு குழுக்கள் ஆசை காட்டி கொஞ்சம் முதலீடு போட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்; பங்கு சந்தை முதலீடு ஆலோசனைகள் கொடுக்கிறோம்; கிரிப்டோ கரன்சி முதலிட ஆலோசனைகளை கொடுக்கிறோம் என்று ஆசை வலை விரிப்பார்கள் அதில் சிக்கி பல லட்சங்களில் பணத்தை இழந்தவர்கள் அதிகம். ஒரு முறை நீங்கள் இவர்களிடம் சிக்கிவிட்டால் உங்கள் பணம் கிடைப்பது மிகவும் கடினம் நீங்கள் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்தால் கூட பணம் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இதைப்பற்றி விளக்கினாலும் பலர் என்னிடம் பணமே இல்லை, நான் ரொம்ப உஷார் ஏமாற மாட்டேன் என்று கூறுகிறார்கள். உண்மையாகவே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து இதிலிருந்து எல்லாம் தப்பி விட்டீர்கள் என்றால் மகிழ்ச்சிதான் ஆனால் ஒரு வேலை உங்களுக்கே தெரியாமல் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற அக்கறையில் தான் நான் இதை விளக்குகிறேன்.
மகிழ்ச்சியுடன் டெலெக்ராமை பயன்படுத்துங்கள் எச்சரிக்கையாக இருங்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
Tuesday, May 2, 2023
எச்சரிக்கை ‘Godfather of AI’ ஏன் கூகுளை விட்டு விளகினார்?
செயற்கை நுண்ணறிவின் பிதாமகர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிட்டன் கூகுளில் இருந்து தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார். அண்மைய காலம் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவை பற்றி மக்களுக்கு எச்சரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் வேலையை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார். அனைவரின் மத்தியிலும் இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஹின்டன் டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் செயற்கை நுண்ணறிவுக்கு அடிப்படையாக விளங்கும் கற்றல் இயந்திரங்களை உருவாக்க முனைந்தார். எந்திரங்கள் கற்க அடிப்படையான செயற்கை நரம்பியல் வலை நுட்பத்தை (Artificial neural network) மேம்படுத்தினார். அவரின் சிந்தனையில் உருவானது தான் டீப் லேர்னிங் (Deep learning) எனும் தொழில்நுட்பம்.
இவரின் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்ட பல முக்கிய நிறுவனங்கள் இவரை வேலைக்கு எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியது. ஆனால் அவர்கள் மத்தியில் ஏலம் ஒன்றை ஏற்பாடு செய்தார், அதிகம் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தின் சேரப் போவதாக அறிவித்தார். ஏலத்தில் வென்றது கூகுள் நிறுவனம்.
இவர் கூகுள் நிறுவனத்தில் இணைந்த பின் இவருடைய டீப் லேர்னிங் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவில் பல அசாத்திய சாதனைகளை நிகழ்த்தி காட்டியது. கணினி பார்வை எனும் பிரிவிலும், உரையாடலுக்கு உதவும் லார்ஜ் லாங்குவேஜ் மாடல் தொழில்நுட்பமும் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது.
இன்று பரபரப்பாக இருக்கும் சாட் ஜிபிடி இவரின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதுதான்.
அண்மையகால சேட் ஜிபிடி வளர்ச்சி இவரை மகிழ்ச்சி அடையவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனம் சேட் ஜி பி டி யை வாங்கியதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் பதற்ற படத் தொடங்கியது. அதனால் செயற்கை நுண்ணறிவின் ஆய்வுகளின் அறம் சார்ந்த முன்னெடுப்புகளை நிறுத்தியது. எப்படியாவது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் போட்டி போட்டு ஜெயித்து விட வேண்டும் என்கிற முனைப்பில் எந்தவித அறம் இல்லாமல் வெற்றியை நோக்கி மட்டுமே கூகுள் நிறுவனம் சென்று கொண்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இப்படி வெறிபிடித்தார் போல் நம்மால் சமூகத்திற்கு அறிமுகப்படுத்த முடியாது என பல அறிஞர்கள் எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார்கள். google உட்பட பல நிறுவனங்கள் இதைக் கண்டு கொள்வதில்லை.
தான் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் நன்மைகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் அதன் தீமைகளைப் பற்றி நன்கு அறிந்தவரான ஜெஃப்ரி ஹிண்டன் கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்க விரும்பவில்லை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான மிக விரிவான கட்டுப்பாடுகள் மற்றும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் வேண்டும் என்பதை ஜெஃப்ரி உறுதியாக நம்பினார். ஆனால் கூகுள் நிறுவனத்தில் இருந்து இதை செய்ய முடியாது என்று உணர்ந்த அவர் அதிக சம்பளம் கொடுக்கும் அந்த வேலையை உதவியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய நிறுவனம், அளவிற்கு அதிகமான சம்பளம், தொழில்நுட்பத் துறையில் பிதாமகர் என்ற பெயர் இத்தனையையும் விட்டுவிட்டு ஜெஃப்ரி இண்டன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன் என்று வேலையை உதவியது அனைவருமே வியப்பாக பார்க்கிறார்கள். இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பல பத்திரிகை பேட்டிகளிலும் ஜெப்ரி இன்டர்ன் தொடர்ந்து அறம் பற்றி தான் பேசுகிறார். தொழில்நுட்பத்தை உருவாக்குவது மட்டும் தன் கடமை அல்ல அதை மக்களுக்கு நன்மை படுத்துவதாக மாற்றுவதும், அறம் சார்ந்து அந்த தொழில்நுட்பம் இயங்குகிறதா என்பதை கண்காணிப்பதும் கூட தன் வேலை தான் என்று அவர் உலகிற்கு சொல்லாமல் சொல்லி உள்ளார்.
Chatgpt,Bard AI ரகசியம்: கூகுள் ஏன் டிமிண்ட் கெபுருவை நீக்கியது?
வினோத் ஆறுமுகம்- சைபர் புத்தா
Thursday, April 20, 2023
செயற்கை நுண்ணறிவு பக்தி ரோபோட்கள் அவை உருவாக்கும் ரோபோட் கடவுள்
Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிகள் நம்மை சுற்றி பல நூறாக பெருகிவிட்டது. நம் செல்போனில் செயற்கை நுண்ணறிவு உள்ளது, விரைவில் நம் வண்டிகளில் வந்துவிடும். நாளை நம் சமையல் கட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி முதல் கேஸ் ஸ்டவ் வரை செயற்கை நுண்ணறிவு சாதனமாக மாற வாய்ப்புகள் உள்ளது. இப்படி அனைத்திலும் நுழைந்த செயற்கை நுண்ணறிவு பூஜை அறையில் நுழையக் கூடாதா?
இதை தான் பக்தி செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் என அழைக்கிறார்கள். நீங்கள் சாட் ஜிபிடி பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். செயற்கை நுண்ணறிவு அரட்டை ரோபோட். இதன் மாதிரியைக் கொண்டு கீதா ஜி பி டி என்னும் மென்பொருளை சிலர் உருவாக்கியுள்ளார்கள். இந்த மென்பொருளில் நீங்கள் பகவத் கீதை தொடர்பான கேள்விகளை கேட்டால் அதற்கான பதில்களை அந்த மென்பொருள் அளிக்கும். இந்து மதம் என்று இல்லை பிற மதங்களும் இனி செயற்கை நுண்ணறிவை தங்கள் மத சேவைக்காக பயன்படுத்த விருப்பம் காட்டி வருகிறார்கள்.
ரோபோட்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்து கோவில்களுக்குள் நுழைந்து விட்டது. ஆரத்தி எடுக்கும் ரோபோட், பூஜையின் போது மணி ஆட்டும் ரோபோட், என நம் கோயில்களில் ரோபோட்களை பார்த்திருக்கிறோம்.அண்மையில் கேரளாவில் யானையைப் போன்றரோபோடை உருவாக்கி அனைவரின் பாராட்டை பெற்றார்கள். இதனால் ஒரு கோவிலில் யானை செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் ரோபோட் யானை மிகவும் பக்தியுடன் செய்யும் அதே நேரம் ஒரு யானையை நீங்கள் கட்டிப்போட்டு கொடுமைப்படுத்த தேவையில்லை. விலங்கு நல ஆர்வலர்கள் மிகவும் ஹேப்பி அண்ணாச்சி..
செயற்கை நுண்ணறிவு பக்தி ரோபோட்களா இன்னொரு பயன்
பாதிரியார் வேலையையும் அர்ச்சகர் வேலையையும் இனி
ரோபோட்களை அற்புதமாக செய்துவிடும். மசூதிகளில்
இந்த ரோபோட்கள் நல்ல பயன் தரும். இந்த மதம் அந்த
மதம் என்றில்லாமல் அனைத்து மதத்திலும் மத
சொற்பொழிவுகள், மதவாசிப்புகள் மதக்கருத்துக்களை
எடுத்துச் சொல்வது, அதற்கான பதில் சொல்வது,
மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்வது என பல வேலைகளை
இனிமேல் ரோபோட்கள் செய்து விடும்.
ஆனால் செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருட்கள் அல்லது ரோபோட்கள் சமய சடங்குகளுக்கு பயன்படுத்துவதைப் பற்றி கவலை தெரிவிக்கிறார்கள் ஆய்வறிஞர்கள்.
இப்போதைக்கு உள்ள செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களைப் போல சிந்திக்கும் மென்பொருள் அல்ல இது முழுக்க முழுக்க கணித அடிப்படையிலான மனிதர்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் வேலையை செய்யும் செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள்.
ஒரு பக்கம் பக்தி என்பது நம்முடைய பகுப்பாய்வும் மூளையை கொஞ்சம் அடக்கி உணர்வுபூர்வமான மூளையை முன்னிலைப்படுத்துவது தான். மீண்டும் மீண்டும் மதச் சடங்குகளை கேள்வி கேட்காமல் செய்வதைத்தான் நாம் பெரும்பாலும் பக்தி என்று மக்களை நம்ப வைத்து இருக்கிறோம். அப்படி என்றால் இந்த ரோபோட்கள் மனிதர்களை விட மிகப்பெரிய பக்திமான்களாக உருவாக வாய்ப்பு இருக்கிறது.
இதில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் என்பதை நாம் கவனித்தால் ஒரு வேலை வருங்காலத்தில் ரோபோட்கள் ஒரு புது கடவுளையோ மதத்தையும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் இருக்கிறது. ரோபோக்கள் உருவாக்கும் அந்த ரோபோ கடவுள் கண்டிப்பாக சிந்தனை தொடர்பான விஷயங்களுக்கு மிகவும் தூரமானதாக இருக்கும் அதே நேரம் திரும்பத் திரும்ப கமெண்ட் களுக்கு கட்டுப்படும் பல புதிய மதச் சடங்குகளை கூட இந்த ரோபோக்கள் உருவாக்கலாம் என கூறுகிறார்கள்.
மனிதர்கள் சிந்திப்பதை மறந்து பகுத்தறிவதை மறந்து ஒரு எந்திரமாக மாறுவதும். ஒரு எந்திரம் கடவுளாக மாறுவதும் நடக்கும் போது இனி கடவுள் தான் மனிதனாக வேண்டும் அப்படியானால் தான் மனித சமூகத்தை காப்பாற்ற முடியும் போல..
Tuesday, February 21, 2023
3-D BioPrinting: கிட்னி, இதயம் வேண்டுமா Copy, Paste ஒரு Print
வருங்காலம் ஒருவருக்கு கிட்னி பெயிலியர். மாற்று கிட்னி வேண்டும் மருத்துவமனையில் அவரின் கிட்னியை ஸ்கேன் செய்து அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை ஒரு பயோ பிரிண்டருக்கு அனுப்புகிறார்கள். சிறிது நேரத்தில் கிட்னி ரெடி. அப்படியே அறுவை சிகிச்சை. விஷயம் முடிந்தது. கிட்னி, இதயம், என எந்த உறுப்பாக இருந்தாலும் சில மணித்துளிகளில் ரெடி. இது தான் 3-டி பயோபிரிண்டிங் தொழில்நுட்பம்.
3-டி பிரிண்டிங் எனும் தொழில்நுட்பம் இப்போது மிகப் பிரபலமாகி வருகிறது ’ரெசின்’கள் எனும் ஒருவித சிறப்பு ப்ளாஸ்டிக்களை கொண்டு நீங்கள் ஒரு வரைபடத்தை உள்ளீட்டால் அதை அப்படியே பிரதி எடுத்து ஒரு உருவத்தை உருவாக்கிவிடும். அதாவது பிரிண்ட் செய்துவிடும். இப்போது சிலைகள் எல்லாம் இந்த 3-டி ப்ரிண்ட் எனும் தொழில்நுட்பம் கொண்டு தான் செய்கிறார்கள். இது வளர்ந்து ஒரு வீட்டின் மாடல் கொடுத்தால் காலி இடத்தில் வீட்டையே கட்டி கொடுத்துவிடுகிறது. சரி ப்ளாசிடிக் ப்ரிண்டிங் போலவே மனித உறுப்புகளை ப்ரிண்ட் செய்ய முடியுமா என நினைத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கனவு தான் இந்த 3-டி ப்ரிண்டிங்கை உருவாக்கி உள்ளது.
நாம் சாதரண பிரிண்டரில் இங்க் பயன்படுத்துவோம், 3-டி ப்ரிண்டரில் ரெசின் போன்றவற்றை ’இங்க்’காக பயன்படுத்துவோம். 3-டி பயோ பிரிண்டரில் என்ன இங்க்?
பயோ-இங்க் என்பார்கள். இதில் உயிரி செல்கள், அதை இணைக்கும் பிற உயிரி புரதங்கள் சேர்த்த ஐட்ரோஜெல் தான் பயோ இங்க்.
இதை எதற்கு பயன்படுத்தலாம்?
இப்போதைக்கு மருந்து தயாரிக்க, மருத்துவம் படிக்க, அறுவை சிகிச்சை பயிற்ச்சி மேற்கொள்ள பயனப்டுத்துகிரார்கள். இதனால் நமக்கு உண்மையான உறுப்புகளை ஆரய்ச்சி செய்த பயனும் கிடைக்கிறது அதே நேரம் ஆபத்தும் இல்லை. வழக்கமாக மருந்துகலை சோதிக்க மிருகங்கள் , மனிதர்கள் என பல சோதனைகள் மேற்க்கொள்ள வேண்டும் இதனால் பல மருத்துவ சிக்கலும், ஆபத்தும் உள்ளதால் அனுமதி கிடைப்பது மருத்துகளை தள்ளி போடும். மாறாக இந்த பயோ பிரிண்டிங் உறுப்புகள் , செல் மாதிரிகள் மீது ஆய்வுகளை நடத்தினால் புரிதலும் கிடைக்கும், பிந்நாட்களில் சோதிக்க போது பல மருத்துவ ஆபத்துக்களை தவிற்கலாம்.
ஆனால் இந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதின் மூலம் நாளை மிக எளிதாக உடல் உறுப்புகளை பயோபிரிண்ட் செய்யலாம். இது மனித குலத்தின் மிகபெரும் சிக்கலை தீர்ததாக மாறும். வாழ்வை நீட்டிகவும், கான்சர் மாதிரியான நோய்களில் இருந்து இளம் மரணங்களை தடுக்கவும் உதவும்.
Monday, February 20, 2023
Twitter for Porn: செக்ஸ் படங்கள் தான் கருத்து சுதந்திரமா?
Twitter for Porn: செக்ஸ் படங்கள் தான் கருத்து சுதந்திரமா?
கடந்த வருடம் டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதிலிருந்தே கோமாளிதனங்கள் உச்சத்தில் சென்றது. அவரின் முட்டாள்தனமான வாதங்களை முன் வைக்கும் டிவிட்கள் பலரை கோபப்படுத்தின. டிவிட்டரில் பணிபுரிந்தவர்கள் ராஜினாமா செய்தார்கள். முதலீட்டாளர்கள் பின் வாங்கினார்கள். மேலும் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் வருங்காலத்தில் டிவிட்டரில் Porn எனப்படும் ஆபாச சமூக வலைதளமாக மாற்றபடலாம் என தகவல் வெளிவந்துள்ளது.
எலன் மஸ்க் தன்னை கருத்து சுதந்திர காவலனாகவும், இறைதூதராகவும் நினைத்துக் கொண்டிருப்பவர். அனைத்து கோமாளிதனங்களையும் இந்த கருத்து சுதந்திரம் எனும் வார்த்தையின் பின் போய் ஒளிந்துக்கொள்வார். இப்போது டிவிட்டர் நிறுவனத்தின் வருமானததை கூட்ட ஏன் ஆபாச படங்களை அனுமதிக்க கூடாது என ஒரு திட்டத்தை சொல்லி குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.
இண்டர்நெட்டில் 60சதவீதம் பயன்பாடு போர்ன் எனப்படும் ஆபச படங்கள், சாட்கள் தான். நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தாலும் அதில் எப்படியாவது இந்த ஆபாச தனங்கள் நுழைந்துவிடும். டம்ப்ளர் (Tumblr) எனும் வலைதளத்தை கலை ரீதியான குறும் வலைப்பூவாக டிவிட்டர் போல் மக்கள் பயனப்டுத்த உருவாக்கினார்கள். ஆனால் ஐந்தே வருடத்தில் அது ஆபாச படங்கள், செக்ஸ்டிங் செய்யும் தளமாக மாறியாது. ஆனால் கொள்கை பிடிப்புள்ள டம்ப்ளர் நிறுவனமோ பல லட்சங்கள் செலவு செய்து ஆபாச குப்பைகளை நீக்கி வருகிறது.
அதே போல் ஒன்லி பேன்ஸ் எனும் வலைதளம் தங்கள் திறமைகளை காட்டி மக்களிடம் பணம் வசூலிக்கும் பேவால் வீடியோ (paywalled Video) எனும் முறையை அறிமுகப்படுத்தியது. இதில் ஒரு இசை கலைஞர் இசைத்தோ, பாடியோ தன் திறைமையை வெளிகாட்டும் வீடியோ வெளியிடுவார், விருப்பமுள்ள ரசிகர்கள் அவருக்கு லைவில் பணம் அனுப்பலாம். ஆனால் செக்ஸ் படங்களில் நடிப்பவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் Cybersex வருமானத்திற்காக இதை பயனப்படுத்த தொடங்க இன்று அது முழு ஆபாச வலைதளமாக மாறிவிட்டது.
டம்பளர் போராடுகிறது. ஆனால் ஒன்லிபேன்ஸ் நிறுவனமோ இதை ஆபாச வலைதளமாகவே மாற்றிவிட்டது.
இதை மனதில் வைத்து நாம் ஏன் டிவிட்டர் தளத்தில் ஆபாச வீடியோக்களை அனுமதிக்க கூடாது என எலன் மஸ்க் ஒரு திட்டம் தீட்டியுள்ளார். எலான் மஸ்க் கடந்த வருடம் சுமார் 100 பில்லியன் டாலர்களை இழந்தார், டெஸ்லா கார் நிறுவனம் சொதப்புகிறது. டிவிட்டரை வாங்குகிறேன் என செய்த அலப்பரையும் நஷ்ட்டம் தான். இவரின் கோமாளி தனங்களை பார்த்தா சுமார் 100 நிறுவனங்கள் டிவிட்டருக்கு விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்திக்கொண்டது. மொத்த பண தேவையையும் சாமாளிக்க தான் இந்த ஆபாச பட திட்டம்.
டிவிட்டரில் ஏற்கனவே 135 கண்டெண்ட் ஆபாச படங்கள் தான். கருத்து சுதந்திரம் எனும் பெயரில் பல ஆபாச வீடியோக்களை டிவிட்டர் அனுமதிக்க வேண்டும் என எலன் மஸ்க் ஏற்கனவே பச்சை கொடி காட்டிவிட்டார். இப்போது அதை பணமாக்க வேண்டும். ஒன்லி பேன்ஸ் செய்வது போல், வீடியோக்கள் காட்டுபவர்களுக்கு வரும் பணத்தில் ஒரு கமிஷன் வாங்கலாம். Paid DM முறையில் செக்ஸ்டிங் அனுமதித்து ஒரு கமிஷன் பார்க்கல்லாம் என பல கனவுகளுடன் இருக்கிறார்.
தலையில் அடித்துக்கொள்ளும் தொழில்நுட்ப விமர்சகர்கள், மற்றும் சிலிகான் வேலி செய்தியாளர்கள். இப்படியாவது டிவிட்டர் தளம் ஆபாச குப்பையாகி மக்கள் அனைவரும் டிவிட்டரில் இருந்து வெளியேறி அது நாசாமாய் போகட்டும் என சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
Saturday, February 18, 2023
மரணத்தை வெல்ல Super பணக்காரர்கள் நடத்திய ரகசிய மாநாடு.
அறிவியல் துணைகொண்டு மரணத்தை வெல்ல முடியுமா? இது தான் உலகின் சூப்பர் பணக்காரர்களின் ஒரே கேள்வி, தேடல். எவ்வளவு பணம் இருந்து என்ன பயன், வயதாகி, மூப்பு வருகிறதே? ஒருநாள் செத்துப் போய்விடுமே என்ற கவலை. அதற்குத் தீர்வு தேடும் ஒரு மாநாடு தான் Longevity Investors Conference.
Longevity என்றால் நீண்ட நாள் உயிர் வாழ்ந்தால், மரணத்தை முழுமையாக வெல்ல முடியுமா எனத் தெரியவில்லை, குறைந்தபட்சம் நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போடலாம் தானே? ஆனால் இந்த Longevity Investors Conference சுருக்கமாக LI மாநாடு என்பது வெறும் வாழ்வை நீட்டிப்பது மட்டுமல்ல, வயதாகி மூப்பு வருகிறதே அதை வெல்லவும் தான். இதை Anti Aging என்பார்கள். அதுமட்டுமல்ல வாழும்போதே புத்துணர்ச்சியுடன் இருக்க Rejuvenating Tech.
இந்த மாநாட்டின் நோக்கமே, மேலே நாம் பார்த்த மூன்று துறைகளில் என்ன ஆய்வுகள் நடக்கின்றன, யாருக்கு முதலீடுகள் தேவை, வருங்காலத்தில் என்ன புது ஆய்வுகள் வரப்போகிறது போன்றவற்றின் தகவல் கிடைக்கும்.
உலகின் முதன்மை பயோடெக் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரும் பணக்காரர்கள் கலந்துகொண்டு விவாதிப்பார்கள். நீங்கள் பணக்காரர்களின் மனதை வென்றால் முதலீடுகள் கிடைக்கும்.
மாநாட்டில் பல நம்பகமான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஈஸ்ட் பாக்டீரியா முதல் சில நுண்ணுயிரிகளின் வயதை வெற்றிகரமாகப் பரிசோதனையில் நீட்டியிருந்தார்கள். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் சில வித நொயெதிர்ப்பு-குறைப்பு மருந்துகள் வெற்றிகரமாக ஆயுளை நீட்டிக்க உதவுவதாகக் கூறினார்கள் (25% சதவீதம் தான் அந்த வெற்றி). சில எலிகளுக்கு மனித பதின்வயது இளைஞர்களின் ரத்தம் கொடுத்து ஆய்வு செய்தபோதும், சில நம்பகமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள் மேலும் விலங்குகள் மனிதர்கள் என்று விரிவடைய வேண்டும். இன்னொரு பக்கம் நன்றாக உடற்பயிற்சி செய்து தசைகளை பலமாக்குங்கள் புத்துணர்ச்சிக்கும், மரணத்தைத் தள்ளிப் போட உதவும் போன்ற ஆய்வு முடிவுகளும் இருந்தது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள டிக்கெட் விலை வெறும் 8 லட்ச ரூபாய் தான், அப்படி நீங்கள் கட்ட தயாராக இருந்தாலும் அவர்கள் கவனமாகத் தேர்வு செய்யும் நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். புத்துணர்ச்சி அளிக்கும் பானங்கள் , உணவுகள் விருந்திலிருந்தது. உணவின் ருசி வேற லெவல் என்று அதில் கலந்துகொண்ட புட் ப்லாகர் ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன்.
விருப்பமிருந்தால் கலந்துகொள்ளவும் : https://www.longevityinvestors.ch/
AI + UWSN : கடல் தண்ணீருக்குள் வையர்லெஸ் இண்டர்நெட்
பூமியின் கால் பாகம் நிலம் என்றால் முக்கால் பாகம் கடல் தான். கடல் தண்ணீர். இந்த கடல் தண்ணீருக்குள் தொடர்புகொள்ளத் தேவை இருக்கிறது, கடலை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.காரணம்,
கடலில் உள்ள உயிரினங்களைப் பற்றி தெரிந்துகொள்ள. கடலை ஆய்வு செய்ய.
கடல் அடியில் உள்ள எரிமலைகளை ஆய்வு செய்ய.
கடல் ஏற்படு சுற்றுச்சூழல் மாசை கண்காணித்து கட்டுப்படுத்தக்
கடலில் புதைந்த போன நகரங்களை அகழ்வாராய்ச்சி செய்ய,
கடலில் புதைந்துள்ள இயற்கை வளங்கள், கனிம வளங்களை மனிதன் பயன்படுத்த.
ராணுவ கண்காணிப்பு செய்ய
எனக் காரணங்கள் அதிகம். மண்ணில் இண்டர்நெட் தொழில்நுட்பம் பல அசாத்தியங்களை நிகழ்த்தியுள்ள நிலையில், அது போன்ற தங்கு தடையின்றி ஒரு வையர்லெஸ் இண்டர்நெட் கடலுக்குள் அமைந்தால் கடலை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம், கடலின் மர்மங்களை தெரிந்துக்கொண்டுவிடலாம்.
நிலத்தில் இண்டர்நெட் என்பது ஆப்டிகள் பைபர் கேபிள்,விண்வெளியில் சாட்டிலைட்கள், காற்றில் மைக்ரோ வேவ் என்ற மூன்று தொழில்நுட்பங்கள் உதவியுடன் வைர்லெஸ் இண்டர்நெட்டை சாத்திய படுத்தியுள்ளோம். இதில் கவனிக்க வேண்டியது உலக இண்டர்நெட்டை சாத்தியப்படுத்தும் ஆப்டிகள் பைபர் கேபிள்கள் கடலுக்கடியில் தான் செல்கிறது. அந்த கேபிள்களை கண்காணிக்கவும் நமக்கு கடலுக்கடியில் ஒரு தொடர்பு அமைப்பு தேவைப் படுகிறது,.
கடலுக்கடியில் தொடர்பு அமைப்பை ஏற்படுத்துவதில் உள்ள முதல் சிக்கல். கடல் முழுவதும் ஆப்டிகள் கேபிள் போட முடியாது. சாத்தியமில்லை. காற்றும் இல்லை. சாட்டிலைட்டும் உதவாது. நிலத்தில் உதவும் தகவல் தொடர்பு முறை தண்ணீருக்குள் வேலை செய்யாது.
கடல் தண்ணீருக்குள் தொடர்பு கொள்ள புதிய தொழில்நுட்பம் தேவை அது தான் Underwate Wireless Sensor network.
இந்த Underwater Wireless Sensor network சுருக்கமாக UWSN பல் சென்சார் எந்திரங்களைக் கொண்டு அதிக அதிர்வுகள் கொண்ட மைக்ரோவேவ்களை அருகில் இருக்கும் அடுத்த சென்சார் எந்திரத்திற்குச் செலுத்தும்,அதைப் பெற்றுக்கொள்ளும் ஒரு மோடம் அடுத்த எந்திரத்திற்குத் தகவல் அனுப்பும். அப்படியே கடலுக்கு மேலே உள்ள எந்திரத்திற்கு தகவல் கிடைத்தவுடன் அதை அருகில் இருக்கும் கண்காணிப்பு மையத்திற்கு எளிதாக ஆனுப்பிவிடும்.
கடலுக்குக்கடியில் கடலின் தட்பவெப்ப நிலை, அதன் பண்புகள், மாற்றங்கள் எனப் பல தகவல்களை இந்த சென்சார்கள் சேகரித்துக்கொண்டே இருக்கும்.
ஆனாலும் இதில் பல சிக்கல். கடலுக்கடியில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களால் இந்த தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றவாறு கண்காணித்து எந்திரங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டே இருக்க வேண்டும். இது மனிதர்களாக மட்டும் செய்ய முடியாது. ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை சில நூறு சென்ஸார்கள் என்றால் சாத்தியமே இல்லை.
இந்த சிக்கல் தான் இத்தாலியில் இருக்கும் அகழ்வாராய்ச்சி தலத்திற்கும் வந்தது. இத்தாலியில் உள்ள ’பேயீ’ நகரம் 2000 ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமான கடற்கரை உல்லாச விடுதி என்று வைத்துக்கொள்ளுங்கள். மார்க் ஆண்டனி முதல் ஜூலியஸ் சீசர் வரை பொழுதுபோக்கிற்காக இங்கே வந்து உல்லாசமாக இருந்த நகரம். கடலக்கடியில் மூழ்கிவிட்டது. பிற்காலத்தில் கடலுக்கடியில் மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி தளமாக மாறிவிட்டது. UWSN மூலம் ஆரம்பக்காலத்தில் ஒரளவு பணிகள் சிறப்பாக நடந்தாலும் இதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல் தலைவலியாகவே இருந்தது. இதற்குத் தீர்வு காண சபீன்ஸா பல்கலைக்கழகத்தில் தலைமை ஆய்வாளர் சிஹிராபெட்ரோலி முனைந்தார். அவர் ஆய்வுக் குழுவுடன் பல தீர்வுகளை பரிசோதித்துப் பார்த்தார்கள். அதில் ஒன்று AI உதவியுடன் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். மனிதர்களின் சாத்தியமில்ல தொடர்பமைப்பின் மாற்றங்களைத் தொடர்ந்து கடலை கண்காணித்து அதன் அடிப்படையில் செய்யும் ஏ.ஐ. மென்பொருளை உருவாக்கினார்கள். மிகவும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ வசதியுடனான ஒரு UWSN வடிவமைத்து சோத்தி பார்த்தார்கள். வெற்றி.
இதை W-Sense என்றழைக்கிறார்கள். இதன் உண்மையான தொழில்நுட்ப அமைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, காப்புரிமைக்குக் காத்திருப்பதால் வெளியிடவில்லை. ஆனால் பரிசோதனையாக பேயீ அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப் படுகிறது.
ஆகாயம், காற்று, நிலம் இப்போது நீர் வரை வெற்றிகரமாகத் தகவல் தொடர்பை மனிதன் உருவாக்கிவிட்டன. இதனால் பல இயற்கை பேரிடர்களைக் கண்காணிக்க முடியும். நெருப்பின் உதவியுடன் ஒரு வையர்லெஸ் தகவல் தொடர்பமைப்பை மனிதன் உருவாக்கிவிட்டால் போதும்..
பின்குறிப்பு:
இந்த கட்டுரையில் UWSN பற்றிய மிக அடிப்படை தொழில்நுட்ப தகவல் புரிதலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது இது முழுமையான தொழில்நுட்ப விளக்கமல்ல..
Friday, February 10, 2023
முதுகுவலி: செயற்கை Spine Discஆக வைரம்
நம் முதுகெலும்பில் உள்ள வட்டுகள் (Spinal Disc) தேய்ந்துவிட பல காரணங்கள் இருக்கிறது. சில நேரத்தில் விபத்தில் கூட முது பலமாகச் சேதமாகலாம். இதற்கு பெரும்பாலும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தண்டுவடத்தில் உள்ள வட்டுகளை செயற்கை வட்டுகள் பொருத்தி மாற்றிவிடுவார்கள். உலகம் முழுவதும் பலர் இடந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்கிறார்கள். இதன் ஆண்டு சந்தை மதிப்பு மாத்திரம் 1 பில்லியின் டாலர்.
இந்த அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நபர் நடப்பதில் இருந்து படுப்பதுவரை பல சிக்கல்கள் ஏற்படும். வாழ்க்கையே முடங்கி படுத்த படுக்கையாகி விடுவார்கள். எந்நேரமும் முதுகு வலியுடன் அவதிப்பட வேண்டும்.
இந்த அறுவை சிகிச்சையின் மூலம் தற்போது பொருத்தப்படும் செயற்கை வட்டுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. மெல்ல மெல்ல அவையும் தேய்ந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. மீண்டும் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனைக்கு Dymicron எனும் நிறுவனம் புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது.
வைரம்.
ஆம் Polycrystalline Diamond எனும் செயற்கை வைரத்ததினால் செய்யப்படும் வட்டுகளை இந்த அறுவை சிகிச்சைக்கு பயனப்படுத்துகிறார்கள். இதுவரை சுமார் 500 நோயாளர்களுக்கு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். இவர்கள் இதற்காக சுமார் 83 காப்புரிமைகளையும் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் ஆய்வுகள் செய்தால் வெற்றிகரமாக இதன் அறுவை சிகிச்சை செலவையும் குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு சுமார் 8 லட்சம் பேர் தங்கள் முதுகெலும்பு பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.
உலகம் முழுவதும் இந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் சந்த மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்.
இந்தியாவில் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டனம் வசூலிக்கிறார்கள்.
Tuesday, February 7, 2023
Chatgpt,Bard AI ரகசியம்: கூகுள் ஏன் டிமிண்ட் கெபுருவை நீக்கியது?
Chatgpt பிரபலமாகிவிட்டது, ஆனால் சாட் ஜி.பி.டி முதல் கூகுள் பார்ட் (BARD) வரை AI மென்பொருட்களின் சிக்கல்கள், அதன் ஆபத்துகளைப் பேசிய டிம்னிட் கெபுருவு எனும் AI Ethics ஆய்வாளரைக் கூகுள் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது. இது பழைய கதை ஆனால் நாம் இன்று இதைத் தான் முதலில் பேச வேண்டும்.
டிமிண்ட் கெபுரு கூகுள் நிறுவனத்தின் பணியாளர். ஆய்வாளர். ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் ஆய்வு பிரிவில் எதிக்ஸ் (ஆய்வு அறம்) ஆய்வராக பணிபுரிந்து வந்தார். இவரின் வேலை வருங்காலத்தில் கூகுள் நிறுவனத்தில் AI தொடர்பான ஆய்வுகளில் கடைப்பிடிக்கப்படும் நேர்மை, அறம், நம்பகத்தன்மையை மேற்பார்வையிட வேண்டும். அது தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட வேண்டும்.
2020ல் OpenAi எனும் நிறுவனம் chatgpt எனும் மென்பொருளை உருவாக்கி வந்த நேரம், கூகுள் நிறுவனமும் தங்கள் தேடு பொறியில் AI வசதியுடன் கூடிய அல்காரிதம்களை மேம்படுத்தப் பல ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது. இதன் அடிப்படை குறிக்கோள் சாட் வடிவில் பயனாளர்கள் உள்ளிடும் கேள்விகளுக்குத் தகுந்த பதிலைத் தர வேண்டும்.
இதன் இயக்கும் விதத்தை வைத்து இதை Transformers என்று அழைப்பார்கள். இதை முதலில் அறிமுகப்படுத்தியது கூகுள் தான். இவை LLM என்றைழைக்கப்படும். LLM என்றால் Large Language Models.
LLM என்பது Artificial neural network எனும் ANN அடிப்படையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்பு அல்காரிதமான deep learning உதவியுடன் இயங்கும்.
இது எப்படி இயங்குகிறது என்றால், இண்டர்நெட்டில் இருக்கும் தகவல்களைப் பெற்று அதைப் பிரித்து ஒழுங்கமைக்கும். அதை லேபிள் செய்து அதன் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யும். இதன் மூலம் சில பரமீட்டர்களை ஒப்பிட்டுக் கற்றுக்கொள்ளும். கற்றதைச் சரிபார்க்கும்.சரிபார்க்க feedbackகளை பெறும், தன் கற்றலை மேம்படுத்திக்கொள்ளும். ஆனால் இதன் கற்றல் என்பது புரிந்துகொள்வதல்ல, தரம் பிரிப்பது. மனிதர்களை போல இவை கற்றுக்கொள்வதில்லை. மாறாகத் தரம் பிரிப்பதைத் தான் கற்றல் என இவர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
இப்போது கெபுருவுக்கு வருவோம். கெபுரு தன் நண்பருடன் இனைந்து ஆய்வு அறிக்கை ஒன்றை அறவியல் இதழில் பிரசுரிக்க முயல்கிறார். இது கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் AI chat மென்பொருட்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
முதல் அவர்கள் எச்சரிப்பது மின்சார செலவு.
மிகப்பெரும் இணையத்தின் தகவல் அடிப்படையில் இந்த LLM இயங்க வேண்டும் என்றால் மிகப்பெரிய டேட்டா செண்டர்கள் வேண்டும். அவ்வளவு பெரிய டேட்டா செண்டர்களை இயக்க பல கிலோவாட் மின்சாரம் தேவைப் படும். அவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வெளியாகும் கார்பண்டை ஆக்ட்சைட் அலவு ஓசோனில் ஓட்டை போட போதும். உலகம் முழுவதும் க்ளைமேட் சேஞ் பற்றிப் பேசி வரும் சூழலில் இவ்வளவு மின்சாரத்தைச் செலவழிப்பது என்பது கொஞ்சமும் சரியல்ல என் வாதாடுகிறார்கள்.
அடுத்து ஒருபக்கச் சார்புத் தன்மை:
இந்த மென்பொருட்கள் நீங்கள் உள்ளிடும் தகவல் அடிப்படையில் தான் அவை கற்றுக்கொள்ளும். இதற்கு வரும் உள்ளீடு தகவல் என்பது இணையத்தில் இருந்து என்பது குறிப்பிடதக்கது. இணையத்தில் ஒரு பொய்யான தகவல் அதிகம் இருந்து அவை மீண்டும் மீண்டும் இந்த மென்பொருளுக்கு தரப்பட்டால் அவை அதை உண்மையென நம்பிவிட வாய்ப்புகள் அதிகம்.
இங்கு தான் நாம் இதன் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும் இவை முழுக்க முழுக்க தகவலுக்குள் ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்குமே தவிர மனிதர்களைப் போல அதை புரிந்துகொள்ளாது.
மக்கள் மிக எளிதாகத் தவறான தகவல்களை நம்பிவிட வாய்ப்புகள் அதிகம். ஒரு முறை பேஸ்புக்கில் பாலிஸ்தீனியர் ஒருவர் அரபு மொழியில் காலை வணக்கம் என போஸ்ட் போட்டார் அதை பேஸ்புக் மென்பொருள் தவறாக “அவர்களைத் தாக்குங்கள்” என ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்துவிட்டது. காலை வணக்கம் போட்டவருக்குக் காலை நல்லதாக விடியவில்லை கைதுச் செய்யப்பட்டுவிட்டார்.
இவை அனைத்தையும் சுட்டிக் காட்டிய கெபுரு இது போன்ற AI சாட் மென்பொருட்களை உருவாக்கவும், பயனில் விடவும் நிதானம் தேவை , நிரைய ஆய்வுகள் தேவை எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் கூகுள் நிறுவனமோ விடுமுறையில் இருந்த கெபுருவை அப்படியே வேலையை விட்டு நீக்கிவிட்டது.
கெபுரு இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறார். இந்த மென்பொருட்களின் சாதக பாதகங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அண்டார்டிகா ஐஸ் கட்டிகளை உருகாமல் காக்கும் பெங்குவின் மலம்
அண்டார்டிகாவில் உள்ள ஐஸ் கட்டிகள் கரைந்தால் கடல் நீரின் அளவு உயர்ந்து பல நாடுகள் முழுகிவிடும். அதுமட்டுமல்ல உலகின் தட்பவெட்ப நிலையில் பெரு...
-
சமீபத்தில் ஒரு ஆச்சரியமான செய்தி வெளியாகி உள்ளது. நரம்பியல் இணைப்பு (Neuralink) என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் பேச முடியாத ஒரு மனித...
-
அண்டார்டிகாவில் உள்ள ஐஸ் கட்டிகள் கரைந்தால் கடல் நீரின் அளவு உயர்ந்து பல நாடுகள் முழுகிவிடும். அதுமட்டுமல்ல உலகின் தட்பவெட்ப நிலையில் பெரு...
-
உங்களுக்குப் பிரியாணி சாப்பிட வேண்டும் என ஆசை. நீங்கள் நினைத்த மறு விநாடி, உங்கள் எண்ணத்தை உங்கள் கைப்பேசியோ, கணினியோ உள்வாங்கிக்கொண்டு இணைய...











