Showing posts with label tamil breakign news. Show all posts
Showing posts with label tamil breakign news. Show all posts

Wednesday, July 5, 2023

Assistive Tech: பார்வையற்றவர்களுக்கு பார்வையாகும் AI Cloud

 ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன்.  கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக எளிது ஐந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு சில வேலைகளை செய்ய முனைந்தாலே அவர்கள் படும் துன்பம் உங்களுக்குத் தெரிந்துவிடும்.  கண்பார்வையற்றவர்களுக்கு  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஏதாவது செய்ய முடியுமா? 



 நிச்சயம் என்கிறது அசிஸ்டிவ் டெக்னாலஜி.  மனிதர்களுக்கு துணையாக இருக்க உதவும் தொழில்நுட்பத்தினை அசிஸ்டிவ் டெக்னாலஜி என்பார்கள்.  ஜிபிடி 4 , AI Cloud,  கூகுள் கிளாஸ் உதவியுடன் பார்வையற்றவர்களுக்கு ஒரு புது உலகத்தையே கொடுக்க முனைந்திருக்கிறார்கள்.  இந்தத் தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.

கூகுள் கிளாசை ஒரு பார்வையற்றவர் அணிந்து கொள்ள வேண்டும்.  அதில் இருக்கும் காமிரா உதவியுடன் அவரின் சுற்றுப்புறத்தை படம் பிடிக்கும்.  அந்த காட்சிகள் புகைப்படங்களாக முதலில் மாற்றப்படும்.  Gpt4  உதவியுடன் புகைப்படங்களை வார்த்தைகளாக மாற்றும் தொழில்நுட்பம் உள்ளது.  எடுத்த புகைப்படங்கள் இணையத்தின் வழியாக AI Cloud   சர்வருக்கு அனுப்பப்படும்.  அந்த புகைப்படங்களை தொழில்நுட்பம் வார்த்தைகளாக மாற்றும்.  அந்த வார்த்தைகள் சரிபார்க்கப்பட்டு மீண்டும் கூகுள் கிளாஸ் இருக்கு அனுப்பப்படும்.  கூகுள் கிளாஸ் இப்போது அந்த வார்த்தைகளை பேச்சாக  மாற்றி பார்வையற்றவருக்கு தகவலை தெரிவிக்கும்.  கூகுள் கிளாஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் செவி வழி கருவியில் அந்த பேச்சுக்கள் கேட்கும். 

மேலும்  ஒரு மனிதரை அடையாளம் காணவும்,  தன் சுற்றுப்புறத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் முடியும்.  உங்கள் நண்பர் வரும் பட்சத்தில் அவர் படத்தின் உதவியுடன் கூகுள் கிளாஸ் இன்னார் என்பதை தெரிவிக்கும்.  உங்கள் சுற்றுப்புறத்தை விளக்கக் கூறினால் எதிரில்  இருப்பவற்றை படங்களாக பிடித்து அதைப் பற்றி விளக்கும். 

 நீங்கள் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால்   வானிலை,  நடைபாதையில் உள்ள தகவல்கள்,  கடைகள்,  வண்டிகள்  என நீங்கள் நடந்து செல்லும் போது உங்களுடன் ஒருவர் விளக்கமாக அதைப் பற்றி எல்லாம் விவரனையுடன் பேசிக் கொண்டிருப்பார். 

 உண்மையாகவே பார்வையற்றவர்களின் வாழ்க்கை மிக மிக எளிதாகும்.  பார்வையற்றவர்கள் யாருடைய உதவியும் இன்றி இனி புத்தகங்களை படிக்கலாம்,  எழுதலாம்,  சமைக்கலாம்,  தங்கள் வாழ்க்கையை சக மனிதரைப் போன்று வாழலாம். 


 அமிலியா என்கிற பிரெஞ்சு படத்தில் ஒரு காட்சி வரும் கண்பார்வை அற்றவர் ஒருவரை அமிழி கைப்பற்றிக் கொண்டு அவரை நடத்திக் கூட்டிச் செல்லும்போது அவரை சுற்றி நடக்கும் முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொண்டே வருவார்.  அந்த காட்சியின் முடிவில் அந்தப் பார்வையற்றவர் மிகுந்த பரவச மனநிலையின் சொர்க்கத்தை அடைந்ததைப் போல காட்டி இருப்பார்கள்.  நிச்சயம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அத்தகைய செயலை செய்து காட்டியுள்ளது.


இனி வரும் காலத்தில் Virtual reality headset உதவியுடன் பார்வையற்றவர்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று கற்பனை செய்யும் போது மகிழ்ச்சி பொங்குகிறது நிச்சயம் அவர்களின் எதிர்காலம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் சிறப்பாக இருக்கும்.




Gene origami என்றால் என்ன?

 மரபணு ஒரிகமி என்று ஒரு தொழில்நுட்பம் உள்ளது.  அதேதான் ஒரிகமி என்றால்  நீங்கள் காகிதத்தை வைத்து பல உருவங்கள் செய்கிறீர்களே  அதேதான் ஆனால் இங்கு நாம் மரபணுவை வைத்து  பல வடிவங்களை செய்யப் போகிறோம்.  ஏன் செய்ய வேண்டும்?

Targeted Drug delivery என்று மருத்துவத்தில் ஒரு தேவை உள்ளது.  நீங்கள் மருந்துகளை உட்கொள்ளும் போது அதன் பக்க விளைவுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஒரு குறிப்பிட்ட உடல் உறுப்பில் சிக்கல் என்றால் அந்த உடல் உறுப்பிற்கு தேவையான மருந்தை தான் கொடுப்பார்கள்.  அந்த மருந்து சிக்கலுக்குள்ளான உடல் உறுப்பை சரி செய்யும்.  ஆனால் அதே மருந்து ரத்தத்தில் கலந்து வேறு ஒரு உடல் உறுப்புகுள் சென்றால் அங்கே புது சிக்கல்களை உருவாக்கும்.  மருத்துவத்தில் இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை இதை தீர்க்கத்தன் டார்கெட்டட் டிரக் டெலிவரி என்ற ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் கொடுக்கும் மருந்து எந்த உடல் உறுப்பு தேவையோ அங்கு சரியாக மருந்தை செலுத்துவது.

 நம்மிடம் மருந்து உள்ளது ஆனால் அதை குறிப்பிட்ட உடல் உறுப்பு எப்படி செலுத்துவது என்பதுதான் இந்த ஆய்வுகள்.  அதில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தீர்வு இந்த  மரபணு ஒரிகமி. #NanoBilogy எனும் தொழில்நுட்பத்தின்  உதவியுடன் மரபணு Scaffolds  கொண்டு ஒரு மருந்தை குறிப்பிட்ட உடல் உறுப்பிற்கு செலுத்துவதற்கு தேவையான ஒரு வடிவத்தை உருவாக்குவார்கள்.  நம் புரிதலுக்காக சொல்கிறேன் ஒரு பெட்டி போன்றோ அல்லது ஒரு பந்து போன்றோ மரபணு ஸ்கேப் போல்டுகளைக் கொண்டு ஒரு வடிவத்தை உருவாக்கி அதில் குறிப்பிட்ட மருந்தை செலுத்தும் போது எந்த உடல் உறுப்பிற்கு தேவையோ அங்கு செல்லும். 


 நான் இதை எளிதாக விளக்கி விட்டேன் ஆனால் இது மிகவும் சிக்கலான ஒரு தொழில்நுட்பம்.  ஒவ்வொரு உடலுறுப்பிற்கும் தேவையான வடிவத்தை கண்டுபிடிப்பதும் அந்த வடிவத்தை பின்னுவதும் மிகவும் சிக்கலானது.  அண்மைய காலம் சில நம்பிக்கையான முடிவுகளை இந்த ஆய்வுகள் கொடுத்துள்ளது வரும் காலத்தில் இது மிகப்பெரிய துறையாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Monday, April 17, 2023

இந்தியாவில் தாக்கப்படும் வாடகை கார் டிரைவகளும் , உணவு டெலிவரி நபருகளும்



அதிகாலை 2 மணி தன் உபர் காரை எடுத்து வந்து டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் பகுதியில் கஸ்டமர் வருகைக்காகக் காத்திருந்தார். குளிர் அவர் முதுகை சில்லிட செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு செங்கல் அவர் முகத்தைப் பதம் பார்த்தது. இரண்டு பேர் திடீரென வந்து தேவியை தாக்கத் தொடங்கினார்கள். அன்றைய நாள் முழுவதும் அவர் ஓட்டி சம்பாதித்த பணத்தை பறித்தனர். தொலைப்பேசியைப் பிடுங்கும் முயற்சியில் அவர் கை உடைந்தது. உபர் நிறுவனத்தின் அவசர உதவிக்குத் தொடர்பு கொண்டார். உபர் நிறுவனம் இரண்டு நாள் கழித்து. தேவி தாக்கப்பட்ட செய்தி பரபரப்பாகிய பின் அந்த எமர்ஜென்சி உதவி அழைப்பிற்கு பதிலளித்தது .

தேவியின் சோக கதையிலிருந்து மீள்வதற்குள் ஐதரபாதில் ரிஸ்வான் என்ற ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் இளைஞர், 23 வயதிருக்கும்.  உணவு டெலிவரி செய்ய மூன்றாம் மாடிக்குச் சென்றார். மாடியில் திறந்துவிட பட்ட நாயிடம் சிக்கிவிட்டார். ஓட வழி இல்லாமல் மேலே இருந்து குதித்துவிட்டார். பலத்த அடி. சில நாட்களில் சிகிச்சையில் இறந்துவிட்டார். அதே நகரில் ஓலா கார் ஓட்டுநருக்கும் வாடிக்கையாளருக்கும் கட்டணத்திற்காக நடந்த வாக்கு வாதத்தில் தாக்கப்பட்ட வெங்கடேஷ் எனும் ஓட்டுநர் கோமாவில் உள்ளார்.


செக்யுரிட்டி, போலிஸ் முதல் கஸ்டமர்கள் வரை தாங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அவமதிக்கப்படுவதாகவும் டிரைவர்கள், டெலிவரி நபர்கள் புகார் கொடுத்தும் யாரும் கண்டுக்கொள்வதில்லை. இது போன்ற தாக்குதல்கள் மரணம் வரை செல்கிறது.   

அதுமட்டுமல்ல கஸ்டமர் போல் வண்டியை புக் செய்து தாககி பணம் பறிப்பது, வனடியை திருடுவது. உனவு டெலிவரி செய்ய வருபவர்களை அவமானபடுத்துவது என்பது நடக்கிறது.

உலகம் முழுக்க இவை இருக்கிறது என்றாலும் இந்தியாவில் சாதி மத ரீதியான வெறுப்பும் சேர்ந்துக்கொள்கிறது.ஒரு ஆய்வில் இந்த வேலையில் ஈடுபடும் 3ல் 1 வருவர் இது போன்ற சம்பவங்களை எதிர்க்கொண்டதாக சொல்கிறது.


இந்தியாவில் பல இடங்களில் முஸ்லிம் டெலிவரி ஏஜெண்ட், டிரைவர்கள் என்றால் கஸ்டமர்கள் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். இசுலாமிய டெலிவரி இளைஞர் ஒருவரை வழி மறித்து தாக்கி உணவை எடுத்து சென்றுவிட்டார்கள். போலிஸ் கம்பளைண்ட் கொடுக்கபட்டது அவ்வளவு தான்.

இந்தியாவில் இருக்கும் சில சங்கங்கள் இதை பற்றி குரல் கொடுத்தாலும், நிறுவனங்களிடமிருந்து பெரிய உதவிகள் இல்லை. இவர்கள் தக்காப்பட்டலும் பெரிய இன்சுரன்ஸ் இல்லை. அப்படி இருந்தாலும் இன்சுரன்ஸ் தொகை வாங்குவதற்குள் நிலமை மோசமாகிவிடும்.


இசுலாமிய வெறுப்பு,சாதி ரீதியான அவமானம். தாக்குதல் என்பது இவர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. இந்தியாவில் 2023ல் சுமார்  2 கோடி பேர் இந்த சர்வீஸ் வேலையில் ஈட்பட்டுள்ளார்கள். இன்னும் பத்தாண்டுகளில் இது மும்மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவர்களுக்கு அரசு சார்ந்த   பெரிய உதவிகள் இல்லை, போலிஸ் மதிகாது. கஸ்டமர்கள் வெறுப்பார்கள், நிறுவனம் பாதுகாப்பளிப்பதில்லை;. இவை முழுவதும் ஒழுங்கப்படுத்த பட வேண்டும், குறைந்தபட்சம் இவர்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதற்க்கு.

 





Monday, February 20, 2023

Twitter for Porn: செக்ஸ் படங்கள் தான் கருத்து சுதந்திரமா?

 Twitter for Porn: செக்ஸ் படங்கள் தான் கருத்து சுதந்திரமா?


கடந்த வருடம் டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதிலிருந்தே கோமாளிதனங்கள் உச்சத்தில் சென்றது. அவரின் முட்டாள்தனமான வாதங்களை முன் வைக்கும் டிவிட்கள் பலரை கோபப்படுத்தின. டிவிட்டரில் பணிபுரிந்தவர்கள் ராஜினாமா செய்தார்கள். முதலீட்டாளர்கள் பின் வாங்கினார்கள். மேலும் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் வருங்காலத்தில் டிவிட்டரில் Porn எனப்படும் ஆபாச சமூக வலைதளமாக மாற்றபடலாம் என தகவல் வெளிவந்துள்ளது.


எலன் மஸ்க் தன்னை கருத்து சுதந்திர காவலனாகவும், இறைதூதராகவும் நினைத்துக் கொண்டிருப்பவர். அனைத்து கோமாளிதனங்களையும் இந்த கருத்து சுதந்திரம் எனும் வார்த்தையின் பின் போய் ஒளிந்துக்கொள்வார். இப்போது டிவிட்டர் நிறுவனத்தின் வருமானததை கூட்ட ஏன் ஆபாச படங்களை அனுமதிக்க கூடாது என ஒரு திட்டத்தை சொல்லி குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.


இண்டர்நெட்டில் 60சதவீதம் பயன்பாடு போர்ன் எனப்படும் ஆபச படங்கள், சாட்கள் தான். நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தாலும் அதில் எப்படியாவது இந்த ஆபாச தனங்கள் நுழைந்துவிடும். டம்ப்ளர் (Tumblr) எனும் வலைதளத்தை கலை ரீதியான குறும் வலைப்பூவாக டிவிட்டர் போல் மக்கள் பயனப்டுத்த உருவாக்கினார்கள். ஆனால் ஐந்தே வருடத்தில் அது ஆபாச படங்கள், செக்ஸ்டிங் செய்யும் தளமாக மாறியாது. ஆனால் கொள்கை பிடிப்புள்ள டம்ப்ளர் நிறுவனமோ பல லட்சங்கள் செலவு செய்து ஆபாச குப்பைகளை நீக்கி வருகிறது. 


அதே போல் ஒன்லி பேன்ஸ் எனும் வலைதளம் தங்கள் திறமைகளை காட்டி மக்களிடம் பணம் வசூலிக்கும் பேவால் வீடியோ (paywalled Video) எனும் முறையை அறிமுகப்படுத்தியது. இதில் ஒரு இசை கலைஞர் இசைத்தோ, பாடியோ தன் திறைமையை வெளிகாட்டும் வீடியோ வெளியிடுவார், விருப்பமுள்ள ரசிகர்கள் அவருக்கு லைவில் பணம் அனுப்பலாம். ஆனால்  செக்ஸ் படங்களில் நடிப்பவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் Cybersex வருமானத்திற்காக இதை பயனப்படுத்த தொடங்க இன்று அது முழு ஆபாச வலைதளமாக மாறிவிட்டது. 

டம்பளர் போராடுகிறது. ஆனால் ஒன்லிபேன்ஸ் நிறுவனமோ இதை ஆபாச வலைதளமாகவே மாற்றிவிட்டது.

இதை மனதில் வைத்து நாம் ஏன் டிவிட்டர் தளத்தில் ஆபாச வீடியோக்களை அனுமதிக்க கூடாது என எலன் மஸ்க் ஒரு திட்டம் தீட்டியுள்ளார். எலான் மஸ்க் கடந்த வருடம் சுமார் 100 பில்லியன் டாலர்களை இழந்தார், டெஸ்லா கார் நிறுவனம் சொதப்புகிறது. டிவிட்டரை வாங்குகிறேன் என செய்த அலப்பரையும் நஷ்ட்டம் தான்.   இவரின் கோமாளி  தனங்களை பார்த்தா சுமார் 100 நிறுவனங்கள் டிவிட்டருக்கு விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்திக்கொண்டது. மொத்த பண தேவையையும் சாமாளிக்க தான் இந்த ஆபாச பட திட்டம்.

டிவிட்டரில் ஏற்கனவே 135 கண்டெண்ட் ஆபாச படங்கள் தான். கருத்து சுதந்திரம் எனும் பெயரில் பல ஆபாச வீடியோக்களை டிவிட்டர் அனுமதிக்க வேண்டும் என எலன் மஸ்க் ஏற்கனவே பச்சை கொடி காட்டிவிட்டார். இப்போது அதை பணமாக்க வேண்டும். ஒன்லி பேன்ஸ் செய்வது போல், வீடியோக்கள் காட்டுபவர்களுக்கு வரும் பணத்தில் ஒரு கமிஷன் வாங்கலாம். Paid DM முறையில் செக்ஸ்டிங் அனுமதித்து ஒரு கமிஷன் பார்க்கல்லாம்  என பல கனவுகளுடன் இருக்கிறார். 


தலையில் அடித்துக்கொள்ளும் தொழில்நுட்ப விமர்சகர்கள், மற்றும் சிலிகான் வேலி செய்தியாளர்கள். இப்படியாவது டிவிட்டர் தளம் ஆபாச குப்பையாகி மக்கள் அனைவரும் டிவிட்டரில் இருந்து  வெளியேறி அது நாசாமாய் போகட்டும் என சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



 


Saturday, February 18, 2023

மரணத்தை வெல்ல Super பணக்காரர்கள் நடத்திய ரகசிய மாநாடு.

 அறிவியல் துணைகொண்டு மரணத்தை வெல்ல முடியுமா? இது தான் உலகின் சூப்பர் பணக்காரர்களின் ஒரே கேள்வி, தேடல். எவ்வளவு பணம் இருந்து என்ன பயன், வயதாகி, மூப்பு வருகிறதே? ஒருநாள் செத்துப் போய்விடுமே என்ற கவலை. அதற்குத் தீர்வு தேடும் ஒரு மாநாடு தான் Longevity Investors Conference. 



Longevity என்றால் நீண்ட நாள் உயிர் வாழ்ந்தால், மரணத்தை முழுமையாக வெல்ல முடியுமா எனத் தெரியவில்லை, குறைந்தபட்சம் நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போடலாம் தானே? ஆனால் இந்த Longevity Investors Conference சுருக்கமாக LI மாநாடு என்பது வெறும் வாழ்வை நீட்டிப்பது மட்டுமல்ல, வயதாகி மூப்பு வருகிறதே அதை வெல்லவும் தான். இதை Anti Aging என்பார்கள். அதுமட்டுமல்ல  வாழும்போதே புத்துணர்ச்சியுடன் இருக்க Rejuvenating Tech.

இந்த மாநாட்டின் நோக்கமே, மேலே நாம் பார்த்த மூன்று துறைகளில் என்ன ஆய்வுகள் நடக்கின்றன, யாருக்கு முதலீடுகள் தேவை, வருங்காலத்தில் என்ன புது ஆய்வுகள் வரப்போகிறது போன்றவற்றின் தகவல் கிடைக்கும். 


உலகின் முதன்மை பயோடெக் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரும் பணக்காரர்கள் கலந்துகொண்டு விவாதிப்பார்கள். நீங்கள் பணக்காரர்களின் மனதை வென்றால் முதலீடுகள் கிடைக்கும். 

மாநாட்டில் பல நம்பகமான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஈஸ்ட் பாக்டீரியா முதல் சில நுண்ணுயிரிகளின் வயதை வெற்றிகரமாகப் பரிசோதனையில் நீட்டியிருந்தார்கள். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் சில வித நொயெதிர்ப்பு-குறைப்பு மருந்துகள் வெற்றிகரமாக ஆயுளை நீட்டிக்க உதவுவதாகக் கூறினார்கள் (25% சதவீதம் தான் அந்த வெற்றி). சில எலிகளுக்கு மனித பதின்வயது இளைஞர்களின் ரத்தம் கொடுத்து ஆய்வு செய்தபோதும், சில நம்பகமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள் மேலும் விலங்குகள் மனிதர்கள் என்று விரிவடைய வேண்டும். இன்னொரு பக்கம் நன்றாக உடற்பயிற்சி செய்து தசைகளை பலமாக்குங்கள் புத்துணர்ச்சிக்கும், மரணத்தைத் தள்ளிப் போட உதவும்  போன்ற ஆய்வு முடிவுகளும் இருந்தது.


இந்த மாநாட்டில் கலந்துகொள்ள டிக்கெட் விலை வெறும் 8 லட்ச ரூபாய் தான், அப்படி நீங்கள் கட்ட தயாராக இருந்தாலும் அவர்கள் கவனமாகத் தேர்வு செய்யும் நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். புத்துணர்ச்சி அளிக்கும் பானங்கள் , உணவுகள் விருந்திலிருந்தது. உணவின் ருசி வேற லெவல் என்று அதில் கலந்துகொண்ட புட் ப்லாகர் ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன். 

விருப்பமிருந்தால் கலந்துகொள்ளவும் : https://www.longevityinvestors.ch/


AI + UWSN : கடல் தண்ணீருக்குள் வையர்லெஸ் இண்டர்நெட்

பூமியின் கால் பாகம் நிலம் என்றால் முக்கால் பாகம் கடல் தான். கடல் தண்ணீர். இந்த கடல் தண்ணீருக்குள் தொடர்புகொள்ளத் தேவை இருக்கிறது, கடலை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.காரணம்,

  1. கடலில் உள்ள உயிரினங்களைப் பற்றி தெரிந்துகொள்ள. கடலை ஆய்வு செய்ய.

  2. கடல் அடியில் உள்ள எரிமலைகளை ஆய்வு செய்ய.

  3. கடல் ஏற்படு சுற்றுச்சூழல் மாசை கண்காணித்து கட்டுப்படுத்தக்

  4. கடலில் புதைந்த போன நகரங்களை அகழ்வாராய்ச்சி செய்ய,

  5. கடலில் புதைந்துள்ள   இயற்கை வளங்கள், கனிம வளங்களை  மனிதன் பயன்படுத்த.

  6. ராணுவ கண்காணிப்பு செய்ய 

எனக் காரணங்கள் அதிகம். மண்ணில் இண்டர்நெட் தொழில்நுட்பம் பல அசாத்தியங்களை நிகழ்த்தியுள்ள நிலையில், அது போன்ற தங்கு தடையின்றி ஒரு வையர்லெஸ் இண்டர்நெட் கடலுக்குள் அமைந்தால் கடலை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம், கடலின் மர்மங்களை தெரிந்துக்கொண்டுவிடலாம். 


நிலத்தில் இண்டர்நெட் என்பது ஆப்டிகள் பைபர் கேபிள்,விண்வெளியில் சாட்டிலைட்கள், காற்றில் மைக்ரோ வேவ் என்ற மூன்று தொழில்நுட்பங்கள் உதவியுடன் வைர்லெஸ் இண்டர்நெட்டை சாத்திய படுத்தியுள்ளோம். இதில் கவனிக்க வேண்டியது உலக இண்டர்நெட்டை சாத்தியப்படுத்தும் ஆப்டிகள் பைபர் கேபிள்கள் கடலுக்கடியில் தான் செல்கிறது. அந்த கேபிள்களை கண்காணிக்கவும் நமக்கு கடலுக்கடியில் ஒரு தொடர்பு அமைப்பு தேவைப் படுகிறது,.

கடலுக்கடியில் தொடர்பு அமைப்பை ஏற்படுத்துவதில் உள்ள முதல் சிக்கல். கடல் முழுவதும் ஆப்டிகள் கேபிள் போட முடியாது. சாத்தியமில்லை. காற்றும் இல்லை. சாட்டிலைட்டும் உதவாது. நிலத்தில் உதவும் தகவல் தொடர்பு முறை தண்ணீருக்குள் வேலை செய்யாது.

கடல் தண்ணீருக்குள் தொடர்பு கொள்ள புதிய தொழில்நுட்பம் தேவை அது தான் Underwate Wireless Sensor network.

 இந்த  Underwater Wireless Sensor network சுருக்கமாக UWSN பல் சென்சார் எந்திரங்களைக் கொண்டு அதிக அதிர்வுகள் கொண்ட மைக்ரோவேவ்களை அருகில் இருக்கும் அடுத்த சென்சார் எந்திரத்திற்குச் செலுத்தும்,அதைப் பெற்றுக்கொள்ளும் ஒரு மோடம் அடுத்த எந்திரத்திற்குத் தகவல் அனுப்பும். அப்படியே கடலுக்கு மேலே உள்ள எந்திரத்திற்கு தகவல் கிடைத்தவுடன் அதை அருகில் இருக்கும் கண்காணிப்பு மையத்திற்கு எளிதாக ஆனுப்பிவிடும். 


கடலுக்குக்கடியில் கடலின் தட்பவெப்ப நிலை, அதன் பண்புகள், மாற்றங்கள் எனப் பல தகவல்களை இந்த சென்சார்கள் சேகரித்துக்கொண்டே இருக்கும். 

ஆனாலும் இதில் பல சிக்கல். கடலுக்கடியில்  தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களால் இந்த தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றவாறு கண்காணித்து எந்திரங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டே இருக்க வேண்டும். இது மனிதர்களாக மட்டும் செய்ய முடியாது. ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை சில நூறு சென்ஸார்கள் என்றால் சாத்தியமே இல்லை. 

   

இந்த சிக்கல் தான் இத்தாலியில் இருக்கும் அகழ்வாராய்ச்சி தலத்திற்கும் வந்தது. இத்தாலியில் உள்ள  ’பேயீ’ நகரம் 2000 ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமான கடற்கரை உல்லாச விடுதி என்று வைத்துக்கொள்ளுங்கள். மார்க் ஆண்டனி முதல் ஜூலியஸ் சீசர் வரை பொழுதுபோக்கிற்காக இங்கே வந்து உல்லாசமாக இருந்த நகரம். கடலக்கடியில் மூழ்கிவிட்டது. பிற்காலத்தில் கடலுக்கடியில் மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி தளமாக மாறிவிட்டது. UWSN மூலம் ஆரம்பக்காலத்தில் ஒரளவு பணிகள் சிறப்பாக நடந்தாலும் இதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல் தலைவலியாகவே இருந்தது. இதற்குத் தீர்வு காண சபீன்ஸா பல்கலைக்கழகத்தில் தலைமை ஆய்வாளர் சிஹிராபெட்ரோலி முனைந்தார். அவர் ஆய்வுக் குழுவுடன் பல தீர்வுகளை பரிசோதித்துப் பார்த்தார்கள். அதில் ஒன்று AI உதவியுடன் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். மனிதர்களின் சாத்தியமில்ல தொடர்பமைப்பின் மாற்றங்களைத் தொடர்ந்து கடலை கண்காணித்து அதன் அடிப்படையில் செய்யும் ஏ.ஐ. மென்பொருளை உருவாக்கினார்கள். மிகவும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ வசதியுடனான ஒரு UWSN வடிவமைத்து சோத்தி பார்த்தார்கள். வெற்றி. 

இதை W-Sense என்றழைக்கிறார்கள். இதன் உண்மையான தொழில்நுட்ப அமைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, காப்புரிமைக்குக் காத்திருப்பதால் வெளியிடவில்லை. ஆனால் பரிசோதனையாக பேயீ  அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப் படுகிறது.


ஆகாயம், காற்று, நிலம் இப்போது நீர் வரை வெற்றிகரமாகத் தகவல் தொடர்பை மனிதன் உருவாக்கிவிட்டன. இதனால் பல இயற்கை பேரிடர்களைக் கண்காணிக்க முடியும். நெருப்பின் உதவியுடன் ஒரு வையர்லெஸ் தகவல் தொடர்பமைப்பை மனிதன் உருவாக்கிவிட்டால் போதும்..


பின்குறிப்பு:

இந்த கட்டுரையில் UWSN பற்றிய மிக அடிப்படை தொழில்நுட்ப தகவல் புரிதலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது இது முழுமையான தொழில்நுட்ப விளக்கமல்ல..

 

Friday, February 10, 2023

Pornhubன் கறுப்பு பக்கம்: சிதைக்கப்படும் சிறுமிகள்

 ஒரு நாள் தன் 15 வயது மகளைக் காணாமல் ஒரு அம்மா தவித்துப் போயிருந்தார், எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. காவல்துறையில் புகார் கொடுத்தும் பயனில்லை. பல மாதங்கள் கழித்து ஒரு நாள் தெரிந்த நபர் தன் அலைப்பேசியில் சில காணொளிகளை அந்த அம்மாவிடம் காட்டினார். அதில் இருப்பது நிச்சயம் தன் மகள் தான் என்பது அந்த அம்மாவிற்குத் தெரிந்துவிட்டது. அந்த காணொளிகள் போர்ன்ஹப் எனும் வலைத்தளத்தில் இருந்தது. அதில் அந்த சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்படும் சுமார் 50 காணொளிகள் இருந்தன…





போர்ன்ஹப்(Pornhub) உங்களில் பல பேருக்குத் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்கு இது ஒரு செக்ஸ் படங்களைக் காட்டும் வலைத்தளம். பொழுதுபோக்கிற்கு  எப்படி யுட்யூபோ, படங்கள் பார்க்க எப்படி நெட்ப்ளிக்ஸ் அது போல் செக்ஸ் படங்களைப் பார்க்க போர்ன்ஹப் வலைத்தளம்.

அண்மையில் இந்த வலைத்தளம் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது குறிப்பாகச் சிறுவர் பாலியல் காணொளிகள் தொடர்பான சர்ச்சைகள்.

9 வயது முதல் 17 வயது வரையிலான சிறுமிகள் மற்றும் வயதுவந்த பெண்கள் கற்பழிக்கப்படும் காணொளிகள், ஒருவரின் அனுமதியில்லாத அந்தரங்க காணொளிகள், புகைப்படங்கள் இந்த வலைத்தளத்தில் குவிந்துள்ளது. சிறுவர் பாலியல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க இந்த தளம் பெரும் காரணமாகி வருகிறது. 


இதைப் பற்றி இனி விரிவாகப் பார்ப்போம்.

போர்ன்ஹப் வலைத்தளம் ஒரு மாதத்திற்கு சுமார் 35 கோடி முறை பார்க்கப்படுகிறது -இது நெட்ப்ளிக்ஸை விட அதிகம். இந்த வலைத்தளத்தில் ஒரு நாளைக்கு சுமார் 30 கோடி முறை விளம்பரங்கள் காட்டப்பட்டு அதன் மூலம் பணமீட்டப்படுகிறது. இந்த தளத்தில் ஒரு பயனாளர் வீடியோவை பதிவேற்றம் செய்துவிட முடியும், அதனால் அவர் பணம் சம்பாதிக்கவும் முடியும்.  ஒரு வருடத்திற்கு சுமார் 13 லட்சம் மணிநேர வீடியோக்கள் புதிதாக பதிவேற்றம் செய்யப் படுகிறது.போர்ன்ஹப் வலைத்தளம் பெரும்பாலும் இலவசம், சில வீடியோக்கள்  மட்டும் தான் காசு கொடுத்துப் பார்க்க முடியும். பல லட்சம் வீடியோக்கள் இலவசமாக உள்ளது.


உண்மையில் நீங்கள் தொடர்ந்து செய்திகளைப் படிப்பவராக இருந்தால் போர்ன்ஹப் பற்றிய நல்ல செய்திகளைத் தான் கேட்டிருப்பீர்கள். போர்ன்ஹப் பல சமூக உதவிகளைச் செய்து வருகிறது, நன்கொடை கொடுக்கிறது. கொரோனா காலத்தில் தம் வலைத்தளத்தை இலவசமாக்கியது. இந்த வலைத்தளத்தின் வருமானத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணம், நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்த தளத்தின் விளம்பரங்கள் வரும். அங்கு சில நொடி விளம்பரம் காட்ட நீங்கள் கோடிகளைக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து விளம்பரம் வருகிறதென்றால் புரிந்துகொள்ளுங்கள்.

ஆனாலும் இந்த வலைத்தளத்திற்குத் தீராத கறுப்பு பக்கம் ஒன்றுள்ளது. அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்… 

அண்டார்டிகா ஐஸ் கட்டிகளை உருகாமல் காக்கும் பெங்குவின் மலம்

  அண்டார்டிகாவில் உள்ள ஐஸ் கட்டிகள் கரைந்தால் கடல் நீரின் அளவு உயர்ந்து பல நாடுகள் முழுகிவிடும். அதுமட்டுமல்ல உலகின் தட்பவெட்ப நிலையில் பெரு...