Showing posts with label hacking. Show all posts
Showing posts with label hacking. Show all posts

Thursday, March 13, 2025

வடகொரியா Hackerகளின் ஆண்ட்ராய்டு Spyware தாக்குதல்! உங்கள் மொபைல் பாதுகாப்பாக உள்ளதா?


சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது. வடகொரிய அரசு ஆதரவு ஹேக்கர்கள், ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் "KoSpy" என்ற spyware-ஐ புகுத்தி தகவல்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த cyberattack-ன் விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

என்ன நடந்தது?
Lookout என்ற cybersecurity நிறுவனம், வடகொரியாவின் APT37 (ScarCruft என்றும் அழைக்கப்படும்) என்ற ஹேக்கர் குழு, ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் ஊடுருவும் புதிய spyware-ஐ உருவாக்கியுள்ளதாக கண்டுபிடித்துள்ளது. இந்த malware-க்கு "KoSpy" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, Google Play Store மற்றும் APKPure போன்ற மூன்றாம் தரப்பு app stores-ல் உள்ள பயன்பாடுகள் மூலம் பரவியுள்ளது.

யாருக்கு ஆபத்து?
முக்கியமாக, கொரிய மற்றும் ஆங்கிலம் பேசும் பயனர்களை இந்த spyware குறிவைக்கிறது. இந்த malware-ஐ நிறுவியவுடன், அது உங்கள் மொபைலில் உள்ள முக்கியமான தகவல்களை திருட முடியும்.

என்ன தகவல்கள் திருடப்படுகின்றன?
 * அழைப்பு பதிவுகள் (Call logs)
 * குறுஞ்செய்திகள் (Text messages)
 * கோப்புகள் (Files)
 * ஆடியோ பதிவுகள் (Audio recordings)
 * திரைப்படங்கள் (Screenshots)
 * இருப்பிடம் (Location)
எப்படி இந்த தாக்குதல் நடக்கிறது?
இந்த spyware, File manager, Security tools, Software updaters போன்ற பயன்பாடுகளாக உருமாறி, உங்கள் மொபைலில் நுழைகிறது. நீங்கள் அந்த பயன்பாடுகளை நிறுவியவுடன், உங்கள் மொபைலில் உள்ள தகவல்களை திருட ஆரம்பிக்கிறது.
கூகுள் என்ன செய்கிறது?
கூகுள் இந்த malware-ஐ கண்டறிந்து, Google Play Store-ல் இருந்து நீக்கியுள்ளது. மேலும், தொடர்புடைய Firebase திட்டங்களையும் நிறுத்தியுள்ளது. Google Play Protect, இந்த malware-ன் அறியப்பட்ட பதிப்புகளிலிருந்து ஆண்ட்ராய்டு பயனர்களை பாதுகாக்கிறது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?
 அதிகாரப்பூர்வமான Google Play Store-ல் இருந்து மட்டுமே பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்.
 மூன்றாம் தரப்பு app stores-ல் இருந்து பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும்.
 உங்கள் மொபைலில் உள்ள security software-ஐ எப்போதும் புதுப்பிக்கவும்.
 அனுமதிக்கப்படாத பயன்பாடுகளை நிறுவுவதை தவிர்க்கவும்.
 உங்கள் மொபைலில் உள்ள முக்கியமான தகவல்களை அவ்வப்போது backup செய்யுங்கள்.
 சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது செய்திகளை திறக்க வேண்டாம்.

Monday, February 24, 2025

க்ரிப்ட்டோ எக்ஸ்சேஞ் பைபிட் நிறுவன Hack நமக்கு சொல்லும் எச்சரிக்கை.

அண்மையில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபாரான பின்  அமெரிக்காவை "கிரிப்டோ தலைநகரமாக" மாற்றும் வாக்குறுதிகளால் கிரிப்டோகரன்சி முதலீடுகள்  தொழில் புத்துயிர் பெற்றிருந்தது. ஆனால் , இந்த வளர்ச்சிக்கு  ஆப்பு வைப்பதுன்போல் ஒரு  ஹேக்கிங் சம்பவம் நடந்துள்ளது. பைபிட் (Bybit) கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் நடந்திருக்கும் பெரிய  ஹேக்கிங் சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த ஹேக்கிங்கின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. யாரும் பொறுபேற்க்கவில்லை. ஆனால் பயனாளர்களுக்கு எந்த நஷ்ட்டமும் வராமல் நிறுவனமே பணத்தை கொடுப்பதாக பொறுபேற்றுள்ளது. 

 ஒருவேளை முந்தைய பெரிய ஹேக்கிங் சம்பவங்களில் ஈடுபட்ட வட கொரியாவின் லாசரஸ் குழு போன்ற அரசு ஹேக்கர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆனால் ஆதரம் இல்லை.குறிப்பாக, 2022-ல் ரோனின் குழுமத்தில் இருந்து 615 மில்லியன் டாலர் திருடப்பட்ட சம்பவத்தில் லாசரஸ் குழுவின் பங்கு சந்தேகிக்கப்பட்டது. நிருபிக்கபடவில்லை. இன்றுவரை எல்லாம் கதை தான்.
ஆனால் இந்த ஹேக்கிங் கிரிப்டோ சந்தையில் அதிர்ச்சி விளைவுகள் ஏற்படுத்தியுள்ளது தான்.

 இந்த ஹேக்கிங், கிரிப்டோ சந்தையின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. பயனாளார் முதலொடு செய்கிறார் சரி, ஆன அந்த நிறுவனத்தை ஹேக்கிங் செய்தால் பயனளார்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதற்க்கு முன்பும் இது போன்ற நிறுவனங்கள் ஹேக் செய்யபட்டு மஞ்சள் நோட்டிஸ் கொடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளது.

 இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும்  நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது.

 அமெரிக்காவில் மு உலகம் முழுவதும்  மீண்டும் கிரிப்டோ ஒழுங்குமுறை தொடர்பான விவாதங்கள்  சூடுபிடிக்கலாம்.

 கிரிப்டோ முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். எப்போதுமே.
 அரசுகள் கிரிப்டோ ஒழுங்குமுறைகளை கடுமையாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.குறிப்பாக சைபர் பாதுகாப்பு விஷயத்தில். சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கிரிப்டோ பரிமாற்றங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இந்த ஹேக்கிங் சம்பவம், கிரிப்டோ தொழிலுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. கிரிப்டோ பரிமாற்றங்கள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும், முதலீட்டாளர்கள் விழிப்புடன் செயல்படவும் இது ஒரு வாய்ப்பு.


அண்டார்டிகா ஐஸ் கட்டிகளை உருகாமல் காக்கும் பெங்குவின் மலம்

  அண்டார்டிகாவில் உள்ள ஐஸ் கட்டிகள் கரைந்தால் கடல் நீரின் அளவு உயர்ந்து பல நாடுகள் முழுகிவிடும். அதுமட்டுமல்ல உலகின் தட்பவெட்ப நிலையில் பெரு...